நெருங்கும் புயல்.. உஷாராகும் ஒடிஷா.. பூஜை விடுமுறைகள் ரத்து!!
புவனேஸ்வர்: வங்கக் கடலில் உருவாகியிருக்கும் புயல் ஒடிஷாவை கடுமையாக தாக்கிவிட்டு கரையைக்கடக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக அரசு ஊழியர்களுக்கான பூஜை விடுமுறைகளை அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் வலுவடைந்து வருகிறது. வரும் 12-ந் தேதியன்று ஒடிஷா மாநிலத்தை புயல் தாக்கக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் 14 மாவட்டங்கள் இப்புயலால் பாதிக்கப்படக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் மணிக்கு 175-178 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டிருப்பதால் ஒடிஷா மாவட்டங்கள் பீதியில் உறைந்து போயுள்ளன. இதனால் அரசு ஊழியர்களுக்கான பூஜை விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டு பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
புயலின் பாதிப்பு மிக மோசமாக இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்ய மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications