Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏழை என்றால் இளக்காரமா? ரூ.1500 கடனுக்காக பைக்கில் இளைஞரை கட்டி.. இழுத்துச்சென்ற கந்துவட்டி கும்பல்

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: ரூ.1,500 கடனை திருப்பிச் செலுத்த தாமதமானதால், ஏழை இளைஞரை கந்துவட்டிக்காரர்கள் தங்கள் மோட்டார் சைக்கிளில் கட்டி பல கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்ற சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கந்துவட்டி என்ற பெயரில் கொலைகளும், சித்ரவதைகளும் நாட்டில் அதிகரித்து வரும் நிலையில், ஒரு விலங்கை போல கயிறால் கட்டி ஒரு மனிதனை மோட்டார் சைக்கிளில் இழுத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, போலீஸார் வழக்கு பதிவு செய்து இந்த இரக்கமற்ற செயலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்துள்ளனர்.

இறுதிச்சடங்குக்கு பணம் இல்லை

இறுதிச்சடங்குக்கு பணம் இல்லை

ஒடிசா மாநிலம் கட்டாக் நகரைச் சேர்ந்தவர் ஜகன்நாத் (22). சிறு வயதிலேயே தந்தையை இழந்தவரான கிஷோர், தனது தாய் மற்றும் இரண்டு சகோதரிகளை காப்பாற்றுவதற்காக பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு கூலி வேலை செய்து வருகிறார். இவரது வருமானத்தை வைத்துதான் அவரது குடும்பத்தினரின் அன்றாட வாழ்க்கை நடந்து வருகிறது. இந்த சூழலில், ஜகன்நாத்தின் தாத்தா கடந்த மாதம் மரணம் அடைந்தார். அவருக்கு இறுதிச்சடங்கை செய்ய கிஷோரிடம் போதிய அளவு பணம் இல்லை.

வீட்டுக்கு வந்த கந்துவட்டி கும்பல்

வீட்டுக்கு வந்த கந்துவட்டி கும்பல்

இதையடுத்து, அக்கம்பக்கத்தினரிடம் இருந்து, கந்துவட்டிக்காரர்களிடம் இருந்தும் ஜகன்நாத் பணத்தை கடனாக பெற்று தனது தாத்தாவின் இறுதிச்சடங்களை நடத்தினார். பின்னர் அவர்களிடம் வாங்கிய கடனை வாரந்தோறும் சிறிது சிறிதாக பணத்தை கொடுத்து ஜகன்நாத் அடைத்து வந்தார். இதில், ஒரு கந்துவட்டி கும்பலிடம் வாங்கிய 1,500 ரூபாய் கடனை அக்டோபர் 17-ம் தேதி வட்டியுடன் திருப்பிக் கொடுப்பதாக அவர் தெரிவித்திருந்தார். அதன்படி, 2 ஆயிரம் ரூபாயை கேட்டு நேற்று இரவு ஜகன்நாத்தின் வீட்டுக்கு கந்துவட்டி கும்பல் வந்தது.

பைக்கில் கைகளை கட்டி..

பைக்கில் கைகளை கட்டி..

அப்போது ஜகன்நாத், தன்னிடம் இப்போதைக்கு பணம் இல்லை என்றும், இரண்டு நாட்களில் பணத்தை கட்டி விடுவதாகவும் கூறினார். ஆனால் அதனை ஏற்காத கந்துவட்டிக்காரர்கள், அவரை சரமாரியாக தாக்கினர். மேலும், வீட்டில் இருந்த பொருட்களையும் சூறையாடினர். ஆனாலும் ஆத்திரம் அடங்காத அவர்கள், கிஷோரின் கைகளை ஒரு மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் கட்டி வைத்து, பைக்கை வேகமாக ஓட்டிச் சென்றனர். இதனால் பைக்கின் பின்னால் கிஷோர் ஓடிச் சென்றார்.

கைது நடவடிக்கை

கைது நடவடிக்கை

சுமார் 3 கி.மீ. தூரம் வரை அவர் இவ்வாறு ரோட்டில் இழுத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், சுதாஹத் சதுக்கம் என்ற பகுதி அருகே அவர்கள் சென்ற போது, அங்கிருந்த பொதுமக்கள் சிலர் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் கந்துவட்டிக்காரர்களிடம் வாக்குவாதம் செய்த பொதுமக்கள், பைக்கில் கட்டப்பட்டிருந்த ஜகன்நாத்தை விடுவித்தனர். இதனிடையே, ஜகன்நாத்தை மோட்டார் சைக்கிளில் இழுத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, கந்துவட்டி கும்பலைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், 3 பேரை தேடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+