துண்டான உடல்கள்.. ஒடிசாவில் புல் ஸ்பீடில் தடம்புரண்ட கோரமண்டல் ரயில்.. எவ்வளவு வேகம் தெரியுமா?
புவனேஸ்வர்: ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 280 பேர் இறந்துள்ள நிலையில் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதற்கிடையே தான் விபத்து நடந்தபோது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் புல் ஸ்பீடில் இயங்கியதும், அதன்பிறகு என்ன நடந்தது? என்பது பற்றிய பரபரப்பான தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி நேற்று கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் நேற்று இரவு தடம்புரண்டது. அதன்பிறகு அந்த வழியாக வந்த பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரயில் தடம்புரண்ட கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்தில் சிக்கியது. இதையடுத்து சரக்கு ரயில் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.

இப்படியாக அடுத்தடுத்து 3 ரயில்கள் விபத்தில் சிக்கின. இந்தியாவில் ரயில்கள் அவ்வப்போது தடம் புரளும் நிலையில் 3 ரயில்கள் அடுத்தடுத்து இப்படி விபத்தில் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் தற்போது வரை தமிழகத்தை சேர்ந்த 35 பேர் உள்பட 280 பேர் வரை பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் தான் ரயில் விபத்து நடந்து பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது விபத்து நடந்தபோது ரயில்கள் எவ்வளவு ஸ்பீடில் சென்றன. விபத்துக்கு எப்படி நடந்தது? என்பது பற்றிய விபரங்கள் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக அரசு தரப்பில் சில விஷயங்கள் கூறப்பட்டுள்ளது. அதாவது மேற்கு வங்க மாநிலம் ஷாலிமாரில் இருந்து நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு கோரமண்டல் ரயில் புறப்பட்டுள்ளது. இந்த ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானகா ரயில் நிலையம் சென்றது. இந்த ரயில் நிலையத்தில் கோரமண்டல் ரயில் நிற்க வேண்டியது இல்லை.
இதனால் ரயில் புல் ஸ்பீடாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ரயில் தடம் புரண்டது. மொத்தம் 21 பெட்டிகள் தடம் புரண்டதில் 3 பெட்டிகள் அருகே உள்ள தண்டவாளத்தில் வுிழுந்தது. இந்த வேளையில் யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் பஹானகா பஜார் ரயில் நிலையம் வழியாக சென்று மோதி தடம்புரண்டது. இதில் 2 பெட்டிகள் தடம் புரண்டது. அதேபோல் சரக்கு ரயிலும் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் 1,257 பேர் முன்பதிவு செய்து பயணித்தனர். யஷ்வந்த்பூர் ரயிலில் 1,039 பேர் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் புல் ஸ்பீட் என்பது மணிக்கு 130 கிலோமீட்டராகும். இந்த ரயில் 1,659 கிலோமீட்டர் தொலைவை கடந்து 25 மணிநேரம் 30 நிமிடத்தில் ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு வரும். இந்நிலையில் தான் தற்போது விபத்து நடந்தபோது ரயில் புல்ஸ்பீட்டில் இயங்கிய தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் விபத்து சமயத்தில் ரயில் 130 கிலோமீட்டர் அல்லது 127 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications