ஒடிஷா ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 278 - அடையாளம் காணப்படாத 101 உடல்கள்! சிபிஐ விசாரணை தொடக்கம்!
புவனேஸ்ர்: ஒடிஷா ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 278 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் பலியானோரில் 101 பேரின் உடல்கள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை. ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை திங்கள்கிழமை தொடங்கியது.
மேற்கு வங்கத்தில் இருந்து தமிழ்நாடு நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை ஒடிஷாவின் பாலசோர் அருகே வெள்ளிக்கிழமை இரவு விபத்தில் சிக்கியது. சில நிமிடங்களில் இந்த கோர விபத்து உலகையே அதிரச் செய்தது.

ஒடிஷா கோர ரயில் விபத்தில் தற்போது வரை பலியானோர் எண்ணிக்கை 278 ஆக அதிகரித்துள்ளது. இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இன்னமும் 101 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படாமலேயே இருக்கிறது.
இதனிடையே ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ தமது விசாரணையை தொடங்கி இருக்கிறது. ஒடிஷா ரயில் விபத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. ஆனால் ரயில்வே வாரியமோ, சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தது. மத்திய அமைச்சர்களும் நாசவேலை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என தெரிவித்திருந்தனர். இதனையடுத்து 10 பேர் கொண்ட சிபிஐ குழு நேற்று ஒடிஷாவின் பாலசோர் பகுதிக்கு சென்று விபத்து நிகழ்விடத்தை நேரில் ஆய்வு செய்தது.

மேலும் ஒடிஷா ரயில் விபத்தில் தங்களின் உறவினர்கள் யாராவது பாதிக்கப்பட்டிருக்கிறார்களா, இறந்துவிட்டார்களா என்பது பற்றி தெரிந்துகொள்ள முடியாமல் இருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு உதவும் வகையில் ஒடிஷா அரசின் உதவியுடன் ரயில்வே அமைச்சகம் முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது.
கீழே தரப்பட்டுள்ள இணையதள முகவரிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள புகைப்படங்களை கொண்டு இறந்தவர்கள், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருப்பவர்கள், அடையாளம் தெரியாத உடல்களுக்கு உரியவர்களை குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் கண்டறியலாம்.
ஒடிஷா ரயில் விபத்தில் இறந்தோரின் புகைப்படங்களை கொண்ட இணைய தள முகவரி
https://srcodisha.nic.in/Photos%20Of%20Deceased%20with%20Disclaimer.pdf
பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளின் பட்டியலை கீழ்காணும் இணையதள முகவரியில் காணலாம்
கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அடையாளம் தெரியாத நபர்களின் பட்டியல் கீழ்காணும் இணையதள முகவரியில் இடம்பெற்றுள்ளது
இது தவிர ரயில்வே உதவி எண் 139-லும், புவனேஸ்வர் மாநகராட்சி உதவி எண். 18003450061/1929 ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ளலாம்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications