12 கை விரல்கள்.. 20 கால் விரல்களுடன் பிறந்த ஒடிஸா பெண்.. சூனியக்காரி என ஒதுக்கும் மக்கள்
Recommended Video
புவனேஸ்வரம்: 12 கை விரல்கள், 20 கால் விரல்களுடன் பிறந்த ஒடிஸா பெண்ணை வயதானவர் என்றும் பாராமல் சூனியக்காரி என மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர்.
ஒடிஸா மாநிலம் கஞ்சாம் மாவட்டத்தில் உள்ளது கடப்படா கிராமம். இங்கு வசிப்பவர் குமாரி நாயக் (65). இவர் பிறக்கும் போதே 12 கை விரல்களுடன் பிறந்தார். மேலும் ஒவ்வொரு காலிலும் 10 விரல்கள் என மொத்தம் 20 விரல்களும் உள்ளன.
இது போல் வித்தியாசமான உடல் அமைப்புடன் பிறந்த பெண்ணை அந்த கிராமமக்கள் சூனியக்காரி என கூறி அவரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். அவரை ஊருக்குள் சேர்ப்பதே இல்லை.

ஏற்க மறுப்பு
இதுகுறித்து குமாரி நாயக் கூறுகையில் தனக்கு இது போன்று கை, கால் விரல்கள் இருப்பதை யாரும் பிறவி குறைபாடாக கருதவில்லை. மூடநம்பிக்கை உள்ள மக்கள் இதை ஏற்க மறுக்கிறார்கள்.

நம்புதல்
என்னிடம் உள்ள இந்த குறையை சரி செய்ய எனக்கு போதிய பொருளாதார வசதி இல்லை. என்னை சுற்றி வசிப்பவர்கள் என்னை ஒரு சூனியக்காரி என்றே நம்புகிறார்கள். என்னை ஒதுக்கி வைக்கிறார்கள்.

5000
இது எனக்கு வேதனையை ஏற்படுத்துகிறது. அவர்கள் என்னை கேவலமாக பார்ப்பதை தவிர்க்கவே நான் வீட்டுக்குள்ளேயே இருப்பேன் என்றார்.

5000-இல் ஒருத்தி
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் இது மரபணு மாற்றங்களால் ஏற்பட்டுள்ள குறைபாடு. இது மாதிரி 5000 பேரில் ஒருவருக்குத்தான் வரும் என்றனர்.












Click it and Unblock the Notifications