கொல்கத்தாவில் 50 ஆண்டு பழைய பாலம் சரிந்து விழுந்தது.. 5 பேர் பலி.. பலர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கொல்கத்தாவில் பாலம் இடிந்து விபத்து-வீடியோ
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள பழைய மேம்பாலம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியானார்கள். பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் உயிர்ப்பலி அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கொல்கத்தா புறநகர் பகுதியில் தராடலா அருகே மேமின்பூர்- தராடலா இடையே ஒரு மேம்பாலம் கடந்த 1970-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் இன்று சரிந்து விழுந்தது.

பாலத்தின் கீழே சென்று கொண்டிருந்தவர்களும், மேலே போய்க் கொண்டிருந்தவர்களும் இடிபாடுகளில் சிக்கினர். கார், மினி பஸ், இரு சக்கர வாகனங்கள் ஆகியன இடிபாடுகளுக்குள் சிக்கின. இதில் 5 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு வருகை தந்துள்ளனர். இந்த மேம்பாலத்தை சரியாக பராமரிக்காததே விபத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications