ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவு... சிறப்பு அந்தஸ்து நீக்கம் மீதான எதிர்ப்பு ... உமர் அப்துல்லா அதிரடி!
ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் குப்கர் கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்த தேர்தல் முடிவு ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை மக்கள் ஏற்று கொள்ளவில்லை என்பதை காட்டுகிறது என அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.
இந்த தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்தது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு மத்திய அரசு நீக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு-காஷ்மீரில் 280 மாவட்ட வளர்ச்சி கவுன்சிலுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் குப்கர் கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாஜக காங்கிரஸ் பின்னடைவை சந்தித்து வருகிறது.
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட சிறப்பு அந்தஸ்து 370-ஐ மத்திய அரசு கடந்த ஆண்டு ரத்து செய்தது மத்திய அரசு.
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரான உமர் அப்துல்லா இந்த தேர்தல் முடிவு குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:-
மாவட்ட வளர்ச்சி கவுன்சிலுக்கான தேர்தல் முடிவு எங்களுக்கு ஊக்கமளிக்கின்றன. ஏனெனில் நாங்கள் பல காலம் சிறையில் இருந்தோம். எங்களுக்கு எதிராக அரசு எந்திரங்கள், அதிகாரங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தியபோதும் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.
ஜம்மு-காஷ்மீரில் மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து நீக்கியதை மக்கள் ஏற்று கொள்ளவில்லை என்பது இந்த தேர்தல் முடிவு மூலம் தெளிவாகிறது. பாஜக 3 இடங்களில் வெற்றி பெற்றதை சாதனை என நினைத்து கொள்கிறார்கள். அது ஒரு சாதனை என்றால், நாங்கள் பெற்ற வெற்றி என்பது ஒரு நிலச்சரிவு போன்றதாகும்.
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற வேண்டும் என்பதில் குப்கர் கூட்டணி உறுதியாக உள்ளது. இதற்காக தொடர்ந்து போராடுவோம் என்று உமர் அப்துல்லா கூறினார்.
-
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications