ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவு... சிறப்பு அந்தஸ்து நீக்கம் மீதான எதிர்ப்பு ... உமர் அப்துல்லா அதிரடி!
ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் குப்கர் கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்த தேர்தல் முடிவு ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை மக்கள் ஏற்று கொள்ளவில்லை என்பதை காட்டுகிறது என அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.
இந்த தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்தது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு மத்திய அரசு நீக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு-காஷ்மீரில் 280 மாவட்ட வளர்ச்சி கவுன்சிலுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் குப்கர் கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாஜக காங்கிரஸ் பின்னடைவை சந்தித்து வருகிறது.
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட சிறப்பு அந்தஸ்து 370-ஐ மத்திய அரசு கடந்த ஆண்டு ரத்து செய்தது மத்திய அரசு.
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரான உமர் அப்துல்லா இந்த தேர்தல் முடிவு குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:-
மாவட்ட வளர்ச்சி கவுன்சிலுக்கான தேர்தல் முடிவு எங்களுக்கு ஊக்கமளிக்கின்றன. ஏனெனில் நாங்கள் பல காலம் சிறையில் இருந்தோம். எங்களுக்கு எதிராக அரசு எந்திரங்கள், அதிகாரங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தியபோதும் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.
ஜம்மு-காஷ்மீரில் மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து நீக்கியதை மக்கள் ஏற்று கொள்ளவில்லை என்பது இந்த தேர்தல் முடிவு மூலம் தெளிவாகிறது. பாஜக 3 இடங்களில் வெற்றி பெற்றதை சாதனை என நினைத்து கொள்கிறார்கள். அது ஒரு சாதனை என்றால், நாங்கள் பெற்ற வெற்றி என்பது ஒரு நிலச்சரிவு போன்றதாகும்.
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற வேண்டும் என்பதில் குப்கர் கூட்டணி உறுதியாக உள்ளது. இதற்காக தொடர்ந்து போராடுவோம் என்று உமர் அப்துல்லா கூறினார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications