தடுப்பூசி பொதுவானது... எக்கட்சிக்கும் சொந்தமானது அல்ல...அகிலேஷ் யாதவுக்கு, உமர் அப்துல்லா பதிலடி!
ஸ்ரீநகர்: எந்தவொரு தடுப்பூசியும் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் சொந்தமானவை அல்ல என்றும் நான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வேன் என்றும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறினார்.
பாஜகவின் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள முடியாது என உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறிய நிலையில் உமர் அப்துல்லா அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அதிகமான மக்கள் தடுப்பூசியை பெறும்போது, அது நாட்டிற்கும், பொருளாதாரத்திற்கும் நல்லது எனவும் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

விரைவில் தடுப்பூசி
இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸை முடிவுக்கு கொண்டு வர விரைவில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இதற்காக இன்று நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஒத்திகை நடந்தது. நாட்டின் மக்கள் கொரோனா தடுப்பூசியை எதிர்பார்த்து உள்ள நிலையில் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள முடியாது என உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது பாஜக தடுப்பூசி
இது தொடர்பாக லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், ''இப்போது நான் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள மாட்டேன். பாஜக அரசை எப்படி நம்ப முடியும். மாநிலத்தில் நாங்கள் ஆட்சியமைக்கும் போது அனைவருக்கும் தடுப்பூசியை இலவசமாக வழங்குவோம். பாஜகவின் தடுப்பூசியை எங்களால் எடுத்துக்கொள்ள முடியாது" என்றார்.

நாட்டுக்கு நல்லது
அகிலேஷ் யாதவின் இந்த கருத்துக்கு தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக உமர் அப்துல்லா கூறியதாவது:- மிகவும் சீர்குலைவை உண்டாக்கிய கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தடுப்பூசி இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவும். தடுப்பூசியை அதிகமான மக்கள் பெறுவார்கள். அதிகமான மக்கள் தடுப்பூசியை பெறும்போது அது நாட்டிற்கும், பொருளாதாரத்திற்கும் நல்லது.

எந்த கட்சிக்கும் சொந்தமானதல்ல
எந்தவொரு தடுப்பூசியும் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் சொந்தமானவை அல்ல. அவை மனிதகுலத்தைச் சேர்ந்தவை. விரைவில் பாதிக்கப்படக்கூடிய நபர்கள் தடுப்பூசி போடுவது மிகவும் சிறந்தது. எனக்கு வேறு யாரையும்(அகிலேஷ் யாதவ்) பற்றி தெரியாது. என் முறை வரும்போது நான் மகிழ்ச்சியுடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வேன் என்று உமர் அப்துல்லா கூறினார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications