மோசமான பின்விளைவுகள் ஏற்படும்.. நீண்ட போராட்டம் இனிதான் துவங்கும்.. உமர் அப்துல்லா கடும் எச்சரிக்கை
Recommended Video
ஸ்ரீநகர்: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்திருப்பது, மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று அறிவித்தார். இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று முதல் அம்மாநில முன்னாள் முதல்வர்கள், மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், உமர் அப்துல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு தன்னிச்சையாக எடுத்துள்ள இந்த முடிவு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. ஜம்மு காஷ்மீர், மக்கள் இந்திய அரசு மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும் வாய்ப்பு உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநில மக்கள் மீதான ஒடுக்குமுறையாக இதை நான் பார்க்கிறேன். இந்த ஒரு மோசமான முடிவை அறிவிப்பதற்காகத்தான் காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வந்துள்ளது.
மத்திய அரசும் அதன் காஷ்மீர் பிரதிநிதியும் (ஆளுநர்) இதுபோன்ற ஒரு முடிவை எடுக்கப் போவதில்லை என்று எங்களிடம் கூறி வந்தது சுத்தப் பொய் என்பது இப்போது அம்பலமாகி விட்டது. எங்களைப் போன்றவர்கள், ஜம்மு காஷ்மீர் மக்களின் ஜனநாயகக் குரலாக இருக்கிறோம். ஆனால் எங்களையும் ராணுவத்தைக் கொண்டு ஒடுக்கிவைத்துவிட்டு, இதுபோன்ற ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரசியல் சாசனத்தின் 370 ஆவது பிரிவு நீக்கப்படுவது சட்டவிரோதமானது. அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இதை தேசிய மாநாட்டு கட்சி உறுதியாக எதிர்க்கும். ஒரு நீண்ட மற்றும் கடினமான போராட்டம் இனிதான் துவங்கப்போகிறது. நாங்கள் அதற்கு தயாராக இருக்கிறோம். இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications