பெங்களூருவில் தமிழக மாணவரைத் தாக்கிய நபர் கைது- கர்நாடகா அமைச்சர் பரமேஸ்வர்
பெங்களூரு: காவிரி பிரச்சனையில் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டதற்காக தமிழக மாணவரைத் தாக்கியவர்களில் வெங்கடேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட்டது கர்நாடகா. இதற்கு எதிராக கடந்த 9-ந் தேதி கர்நாடகா பந்த் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்தில் கன்னட திரை உலகத்தினரும் பங்கேற்றனர். இதை விமர்சித்து தமிழக இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
கொந்தளிப்பு
அவரை தேடிக் கண்டுபிடித்த கன்னட அமைப்பினர் கொடூரமாக தாக்கி அந்த வீடியோவையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதனால் தமிழகத்தில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் எதிரொலி
தமிழகத்திலும் கர்நாடகா நிறுவனங்கள், வங்கிகள் தாக்கப்பட்டன. சென்னை, ராமேஸ்வரம், சீர்காழி, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன்னட நிறுவனங்கள் முற்றுகையிடப்பட்டன.

தமிழக இளைஞர் மீது வழக்கு
இந்த நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக அமைச்சர் பரமேஸ்வர், பெங்களூருவில் தாக்குதலுக்கு உள்ளான தமிழகத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் சந்தோஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் உள்பட அவருடைய குடும்பத்தினர் யாரும் வீட்டில் இல்லை.

ஒருவர் கைது
அவரை தேடும் பணி தொடங்கியுள்ளது. அவரை தாக்கிய வழக்கில் வெங்கடேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய போலீஸ் படையில் இருந்து ஏற்கனவே 10 கம்பெனி போலீஸ் படை கர்நாடகத்துக்கு வந்துள்ளது. மேலும் 10 மத்திய போலீஸ் படை வரவழைக்கப்படுகிறது.
கர்நாடக மக்கள் அமைதி காக்க வேண்டும். வன்முறையில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றார்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications