டெல்லியில் குண்டுவெடிப்பு ஒருவர் பலி: 5 பேர் படுகாயம்; போலீஸார் தீவிர விசாரணை
டெல்லி: டெல்லியில் முக்கிய பகுதியில் நேற்று காலை குண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார். 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லியின் முக்கிய பகுதியான சாந்தினி சவுக் நயா பஜாரில் நேற்று காலை 10.30 மணிக்கு திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும், இந்த சம்பவத்தால் அருகிலுள்ள கட்டிடத்தின் ஜன்னல் பகுதிகள் சேதமடைந்தன.

இதையடுத்து தீவிரவாத தடுப்பு படையினர், தடய அறிவியல் துறை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனையிட்டனர். தீவிரவாத தடுப்பு பிரிவு மற்றும் சிறப்பு பிரிவு போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். குண்டுவெடித்த இடத்துக்கு அருகே சணல் பை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
குண்டு வெடித்த பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்டுள்ள தடயங்களின் அடிப்படையில் இதனுள் பட்டாசுகளை இணைத்து வெடிகுண்டு தயாரித்து அதனை வெடிக்க செய்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இந்த அடிப்படையில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications