Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

OneIndia Exclusive: ஹேமந்த் சோரன் பக்கம் சாயும் முஸ்லிம் வாக்காளர்கள்.. ஜார்க்கண்ட் களநிலவரம் என்ன?

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பிரச்சாரம் அங்குத் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே நமது ஒன் இந்தியா நடத்திய கள ஆய்வில், அங்குள்ள முஸ்லீம்கள் ஹேமந்த் சோரின் ஜேஎம்எம் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். இது எதிர்வரும் தேர்தலில் முக்கிய பங்காற்றும் என்றே தெரிகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இப்போது ஹேமந்த் சோரன் முதல்வராக இருக்கிறார். அங்கு ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி அரசு நடந்து வருகிறது. பாஜக அங்குப் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறது.

jharkhand assembly election 2024 2024 muslim

ஜார்க்கண்ட் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில், அங்குப் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு இப்போது கள நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை நாம் பார்க்கலாம்.

ஜார்கண்ட் தேர்தல்: ராஞ்சி முஸ்லீம் சமூகத்தினர் ஜார்கண்ட் அரசியலைத் தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக மாறியுள்ளனர். அங்குள்ள முஸ்லீம் சமூகத்தினர் ஆளும் ஹேமந்த் சோரனின் ஜேஎம்எம் ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக ஒன்இந்தியா நடத்திய கள ஆய்வு தொடர்பாக நாம் பார்க்கலாம்.

ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் ஆட்சி மற்றும் நலத்திட்டங்கள் குறித்து மக்களிடையே அதிருப்தி இருக்கவே செய்கிறது.. அதேநேரம் மறுபுறம் முஸ்லிம் சமூகத்தினர் பலரும் ஹேமந்த் சோரனின் மீது நம்பிக்கை இருப்பதாகவே கூறி வருகிறார்கள்.. சமூகப் பாதுகாப்பு, சிறுபான்மை நலனில் அவரது அரசு எடுத்துள்ள நிலைப்பாடுகள் என ஹேமந்த் சோரனின் கொள்கைகள் அங்குள்ள முஸ்லிம் சமூகத்தினரைக் கவர்ந்துள்ளது.

ஏன் முக்கியம்: ஜார்க்கண்டில் மொத்தம் 3.5 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், அவர்களில் 20% முஸ்லீம்கள் ஆவர். இதனால் தேர்தலில் அவர்களின் நிலைப்பாடு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக முகமது ஃபரீத் கான் என்ற வாக்காளர் கூறுகையில், "இந்த தேர்தலில் ஜேஎம்எம் வெல்லவே வாய்ப்புகள் அதிகம். ஹேமந்த் சோரன் அரசின் நடவடிக்கைகளால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

எங்கள் தொகுதியில் (ராஞ்சி) ஜேஎம்எம் சார்பில் மஹுவா மாஜி போட்டியிடுகிறார். நிச்சயம் அவருக்கு அனைத்து சமூகத்தினரும் ஆதரவு அளிப்பார்கள். இப்போது இங்கு பாஜகவின் சி.பி. சிங் எம்எல்ஏவாக இருக்கிறார். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக அவரது செயல்பாடுகள் எதுவும் சிறப்பாக இல்லை. நகரின் உள்கட்டமைப்பு மிக மோசமாகப் போய்விட்டது" என்றார்.

மக்கள் நிலைப்பாடு: அதேபோல பாபர் என்ற மற்றொரு வாக்காளராகும் ஹேமந்த் சோரன் அரசு சிறப்பாக இருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், மத்தியில் உள்ள மோடி அரசை அவர் கடுமையாகச் சாடினார். பாபா மேலும் கூறுகையில், "பாஜக ஜூம்லா செய்து வருகிறது. 2014 முதல் பிரதமர் மோடி பல வாக்குறுதிகளை அளித்து வருகிறார். ஆனால், அவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை..

கருப்புப் பணம், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் எனப் பலவற்றைச் சொல்லலாம்.. அதேநேரம் ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் மக்களுக்காக உழைத்துள்ளார். அவரது திட்டங்கள் ஏழை மக்களைச் சென்றடைந்துள்ளன" என்று தெரிவித்தார். அங்கு முழுக்கவே முஸ்லிம்கள் கிட்டதட்ட இதே நிலைப்பாட்டையே எடுத்ததாகத் தெரிகிறது.

ஜார்க்கண்டில் மொத்தமாக 81 இடங்கள் உள்ள நிலையில், அங்கு 41 இடங்களில் வெல்லும் கட்சியே ஆட்சியைப் பிடிக்கும். ஜார்கண்ட் மாநிலத்தில் இந்த முறை நவ. 13 மற்றும் நவ. 20 என்று இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து நவ. 23ம் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+