அழ வைக்கும் வெங்காயம்- சில்லறை விலையைக் கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!
டெல்லி: வெங்காய விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. சில்லறை விலையும் அதிகரித்திருப்பதால் பீதி அடைந்துள்ள மத்திய அரசு, வெங்காயத்தின் சில்லறை விலையை கட்டுப்படுத்த மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.
சமீபகாலமாக வெங்காயத்தின் விலையைக் கேட்டாலே கண்களில் தண்ணீர் வரும் அளவுக்கு அதன் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இது மத்திய அரசுக்கும் கலக்கத்தைக் கொடுத்துள்ளது.
மொத்த விற்பனையில் குறைந்த விலைக்கு விற்கப்படும் வெங்காயம், சில்லறை விற்பனையில் அதிக விலைக்கு விற்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

வெங்காயப் பதுக்கலைத் தடுக்க உத்தரவு
இதனால் செயற்கையான விலையேற்றத்தை உருவாக்கும் விதமாக வெங்காயத்தை யார் பதுக்கினாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளுக்கு ஏற்கனவே மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.

6223 பேர் கைது
இதன்படி இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 35 ஆயிரம் முறை வெங்காயத்தை பதுக்குபவர்கள் மீது அதிரடி சோதனை நடத்தப்பட்டதில், பதுக்கலில் ஈடுபட்ட 6,223 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

மத்திய அரசு சொல்வது என்ன?
இந்நிலையில், மத்திய நுகர்வோர் விவகார அமைச்சக செயலாளர் கேசவ் தேசிராஜூ நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :-

இடைவெளி...
வெங்காய விற்பனையில் மொத்த விலைக்கும், சில்லறை விலைக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. அதே நேரம் வெங்காயத்தின் கையிருப்பும் அதிக அளவில் இருக்கிறது. வினியோகமும் சீராக உள்ளது.

சில்லறை விற்பனை...
அப்படி இருக்கும்போது ஏன் இந்த இடைவெளி வருகிறது என்பது தெரியவில்லை. இதை வைத்து பார்க்கும்போது, சில்லறையாக விற்பனை செய்வதில்தான் பிரச்சினை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

கடும் நடவடிக்கை...
எனவே வெங்காயத்தின் சில்லறை விலையை கட்டுப்படுத்த மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொள்ளப்படும்.

அனுமதி...
வெங்காய பதுக்கலை தடுப்பதற்கு உதவியாக வெங்காய விற்பனையாளர்களது இருப்பை கட்டுப்படுத்துவற்கான அனுமதியை அளிக்கும்படி சத்தீஷ்கார், மேற்குவங்காளம், டெல்லி ஆகிய மாநிலங்கள் மத்திய அரசை கேட்டுக்கொண்டு உள்ளன. விரைவில் இதற்கு அனுமதி அளிக்கப்படும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications