கேரளா ஆன்லைன் விபச்சாரம்... தமிழகத்தில் பதுங்கியிருந்த 2 பெண்கள் கைது
திருவனந்தபுரம்: கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஆன்லைன் விபசார கும்பலைச் சேர்ந்த 2 பெண்கள் தமிழகத்தில் பதுங்கியிருந்த போது போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.
கேரளாவில் ஆன்லைன் மூலம் விபசார தொழிலை நடத்தியதாக கிஸ் ஆப் லவ் அமைப்பின் ரேஷ்மி நாயர், அவரது கணவர் ராகுல் ஆகியோர் போலீசாரிடம் சிக்கினர். சமூக வலைதளங்களை விபசார தொழிலுக்கு இவர்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்த கும்பல் போலீசில் சிக்கிய போது கொச்சியில் ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் இருந்து போலீஸ் பிடியில் இருந்து தப்பிய முபீனா, வந்தனா இருவரும் தமிழகத்தில் குளச்சல் பகுதியில் பதுங்கியிருந்தனர். இந்த முபீனாவின் வங்கிக் கணக்கைதான் ரேஷ்மி நாயரும் ராகுலும் பயன்படுத்தி வந்தனர் என்பதும் தெரியவந்துள்ளது.
அத்துடன் இந்த இருவருக்கும் அடைக்கலம் கொடுத்ததாக ஜூல்ஃபிகர் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.