டெல்லி: யாருக்கும் பெரும்பான்மை இல்லை- பாஜகவுக்கு அதிக இடங்கள்- கருத்துக் கணிப்பு
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காது என்றும் பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி சட்டசபைக்கு டிசம்பர் 4-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத் தேர்தல் குறித்து ஏ.பீ.பி. நியூஸ்-நீல்சன் சார்பில் கடந்த 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 4 ஆயிரம் வாக்காளர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலில் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காது என்கிறது கருத்து கணிப்பு.

பாஜகவுக்கு 28
பாரதிய ஜனதா 28 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பட்ட முறையில் பெரிய கட்சியாக விளங்கும்.

காங்கிரஸுக்கு 22
தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரசுக்கு 22 இடங்கள்தான் கிடைக்குமார்ம்

ஆம் ஆத்மிக்கு 18
புதிதாக கட்சி தொடங்கிய அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு 18 இடங்கள் வரை கிடைக்குமாம்.

ஷீலாவுக்கு வரவேற்பு இல்லை..
3 முறை முதல்வர் பதவியில் உள்ள ஷீலா தீட்சித்துக்கு இளம் வாக்களர்கள் மத்தியில் வரவேற்பு குறைந்துவிட்டதாம்

விஜய் கோயலுக்கு செம செல்வாக்கு
பாஜகவின் முதல்வர் வேட்பாளர் விஜய் கோயலுக்கு மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு உள்ளதாம். அதனால் அவர் அதிகபட்ச வாக்குகளை பெற வாய்ப்புள்ளது என்கிறது கருத்து கணிப்பு.












Click it and Unblock the Notifications