கர்நாடக முதல்வர் டெல்லியில் லாபி.. காவிரி விவகாரத்தில் நெருக்கடி கொடுக்க எம்.பிக்களுடன் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காவிரி நதி நீர் ஆணையம் மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்து அனைத்துக் கட்சி எம்பிகளுடன் கர்நாடகா முதல்வர் குமாரசாமி நேற்று புதன்கிழமை ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
டெல்லியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேவகௌடா, வீரப்பமொய்லி, ஜெய்ராம் ரமேஷ், சதானந்த கௌடா உள்ளிட்ட எம்பிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் விவாதம் நடத்தக்கோரி முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த கூட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசுக்கு எம்பிகள் ஆதரவு தெரிவித்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு கர்நாடகா முதல்வர் குமாரசாமி மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அனந்த்குமார் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.












Click it and Unblock the Notifications