ரம்ஜான் வாழ்த்து தெரிவிக்காத பிரதமர் மோடி: லோக்சபாவில் கிளம்பிய விவகாரம்
டெல்லி: புனித ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருக்கும் முஸ்லிம் மக்களுக்கு பிரதமர் மோடி இப்தார் விருந்து வழங்கவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி லோக்சபாவில் நேற்று பிரச்சினை எழுப்பினார்.
இதேபோல ரம்ஜான் வாழ்த்தும் பிரதமர் தெரிவிக்கவில்லை என்று லோக்சபாவில் எதிர்கட்சியினர் பிரச்சினை எழுப்பினர்.
முஸ்லீம் மக்களுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் பாகுபாடின்றி இப்தார் விருந்து வழங்குவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் ரம்ஜான் மாதத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இப்தார் விருந்து அளித்தனர். ஆனால் பிரதமர் இப்தார் விருந்து அளிக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து லோக்சபாவில் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி பேசுகையில், "பிரதமர் மோடி பசுபதிநாதர் கோவில் முதல் திருப்பதி வரை செல்லும்போது ஒருவரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.
சுதந்திரம் பெற்ற நாள் முதல் பிரதமர்கள் ரம்ஜான் மாதத்தில் இப்தார் விருந்து அளிப்பது நடைமுறையில் உள்ளது. பாஜகவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்கூட இந்த மரபைத் தொடர்ந்தார். ஆனால் இப்போது என்ன நடந்தது?" என்று மோடி இப்தார் விருந்து வழங்காததை வெளிப்படையாக பேசினார்.
இவருடைய இந்த கருத்துக்கு பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன், சவுத்ரி பேசியது அவைக் குறிப்பில் இடம்பெறாது என்று கூறினார்.
இதேபோல் ஜீரோ அவரில் பிரச்சினை எழுப்பிய திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சுதிப் பண்டோபாத்யாய், நேபாள நாட்டில் உள்ள பசுபதிநாதர் கோவிலுக்கு பிரதமர் மோடி 2500 கிலோ சந்தனக்கட்டை வழங்கியதை நினைவுபடுத்தினார்.
பிரதமர் மோடி நாட்டில் வாழும் இஸ்லாமியர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து இருக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதற்கு பாஜக எம்.பி.க்கள் தங்களது இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.அப்போது, பதில் அளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு நாங்கள் அனைத்து மதத்தினரையும் சமமாக மதிப்பவர்கள். ரம்ஜான் பண்டிகைக்காக பிரதமர் வாழ்த்து தெரிவித்து இருந்தார் என்றார்.
வெங்கையா நாயுடுவின் கருத்துக்கு எதிர்க்கட்சியினர் மறுப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் சபையில் கூச்சலும் குழப்பமும் நிலவியது. இதைத் தொடர்ந்த சிறிது நேரத்திற்கு சபையை சபாநாயகர் ஒத்தி வைத்தார்.
-
காமராஜருக்கு தலைவலியாக மாறிய தொற்று நோய்.. ‘இன்புளுயன்ஸா’ நகரமாக அறிவிக்கப்பட்ட சென்னை! -
"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா? -
இந்திய கப்பல்களுக்கு அனுமதி? ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி! பிரச்சனை தீருமா! -
12 காங்.எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் கிடையாதா? "டாப்பில்" செல்வப்பெருந்தகை? திமுக நெருக்கடி? -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications