ரம்ஜான் வாழ்த்து தெரிவிக்காத பிரதமர் மோடி: லோக்சபாவில் கிளம்பிய விவகாரம்
டெல்லி: புனித ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருக்கும் முஸ்லிம் மக்களுக்கு பிரதமர் மோடி இப்தார் விருந்து வழங்கவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி லோக்சபாவில் நேற்று பிரச்சினை எழுப்பினார்.
இதேபோல ரம்ஜான் வாழ்த்தும் பிரதமர் தெரிவிக்கவில்லை என்று லோக்சபாவில் எதிர்கட்சியினர் பிரச்சினை எழுப்பினர்.
முஸ்லீம் மக்களுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் பாகுபாடின்றி இப்தார் விருந்து வழங்குவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் ரம்ஜான் மாதத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இப்தார் விருந்து அளித்தனர். ஆனால் பிரதமர் இப்தார் விருந்து அளிக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து லோக்சபாவில் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி பேசுகையில், "பிரதமர் மோடி பசுபதிநாதர் கோவில் முதல் திருப்பதி வரை செல்லும்போது ஒருவரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.
சுதந்திரம் பெற்ற நாள் முதல் பிரதமர்கள் ரம்ஜான் மாதத்தில் இப்தார் விருந்து அளிப்பது நடைமுறையில் உள்ளது. பாஜகவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்கூட இந்த மரபைத் தொடர்ந்தார். ஆனால் இப்போது என்ன நடந்தது?" என்று மோடி இப்தார் விருந்து வழங்காததை வெளிப்படையாக பேசினார்.
இவருடைய இந்த கருத்துக்கு பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன், சவுத்ரி பேசியது அவைக் குறிப்பில் இடம்பெறாது என்று கூறினார்.
இதேபோல் ஜீரோ அவரில் பிரச்சினை எழுப்பிய திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சுதிப் பண்டோபாத்யாய், நேபாள நாட்டில் உள்ள பசுபதிநாதர் கோவிலுக்கு பிரதமர் மோடி 2500 கிலோ சந்தனக்கட்டை வழங்கியதை நினைவுபடுத்தினார்.
பிரதமர் மோடி நாட்டில் வாழும் இஸ்லாமியர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து இருக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதற்கு பாஜக எம்.பி.க்கள் தங்களது இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.அப்போது, பதில் அளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு நாங்கள் அனைத்து மதத்தினரையும் சமமாக மதிப்பவர்கள். ரம்ஜான் பண்டிகைக்காக பிரதமர் வாழ்த்து தெரிவித்து இருந்தார் என்றார்.
வெங்கையா நாயுடுவின் கருத்துக்கு எதிர்க்கட்சியினர் மறுப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் சபையில் கூச்சலும் குழப்பமும் நிலவியது. இதைத் தொடர்ந்த சிறிது நேரத்திற்கு சபையை சபாநாயகர் ஒத்தி வைத்தார்.
-
குளச்சல் பிரின்ஸ், மயிலாடுதுறை ராஜ்குமார் உள்பட 5 காங். சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு! -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி.. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிய மாணிக்கம் தாகூர்! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
85% ஓவர்.. இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. செல்வப்பெருந்தகை அப்டேட்!












Click it and Unblock the Notifications