கட்சியும் சின்னமும் எங்களுக்கே.. தேர்தல் ஆணையத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் கடிதம்
அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே வழங்கக்கோரி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி: அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே வழங்கக்கோரி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தது. இதைத்தொடர்ந்து இரட்டை இலைச்சின்னம் மற்றும் கட்சி தங்களுக்கே சொந்தம் எனக் கூறி இரு அணிகளும் தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை தாக்கல் செய்தன.

இந்நிலையில் சமீபத்தில் இரு அணிகளும் இணைந்தன. இதைத்தொடர்ந்து கடந்த 12ஆம் தேதி ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
தீர்மானங்கள் நிறைவேற்றம்
இக்கூட்டத்தில், பொதுச்செயலர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டார். கட்சியை வழிநடத்த, ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆவணங்கள் தாக்கல்
இந்த தீர்மானங்கள் மற்றும் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தில் அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி.சண்முகம், உதயகுமார், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன் ஆகியோர் இன்று தாக்கல் செய்தனர்.
சின்னம், கட்சி தங்களுக்கே
அப்போது கட்சி, இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே வழங்கக்கோரி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் கடிதம் வழங்கப்பட்டது.
அணிகள் இணைந்துவிட்டன
அதில், எம்எல்ஏக்கள், எம்.பி.,க்கள் இணைந்து விட்டதாகவும், இணைப்பை பொதுக்குழு அங்கீகரித்து விட்டதால் கட்சியும் சின்னமும் தங்களுக்கே சொந்தம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவிலிருந்து சசிகலா நீக்கப்பட்டு விட்டதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
EVM-யில் வேட்பாளரின் போட்டோ இடம்பெறும்.. சட்டசபை தேர்தலில் புதிதாக அமல் - அறிவித்த தேர்தல் ஆணையம் -
"மம்தா vs மோடி.." மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல்.. மே 4ல் வாக்கு எண்ணிக்கை -
ஏப்ரல் 9ல் கேரளா சட்டசபை தேர்தல். மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை.. அறிவித்த தேர்தல் ஆணையம் -
வாக்காளர்கள் மொபைல் போன்களை வைத்து செல்ல வாக்குச்சாவடியில் தனி வசதி.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
Puducherry Assembly election 2026: புதுவை சட்டமன்ற தேர்தல் ஏப்.9 ஆம் தேதி நடைபெறும்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு -
இனி யாருக்கும் பவர் கிடையாது.. மொத்தமாய் அதிகாரத்தைக் கையில் எடுத்த தேர்தல் ஆணையம்! இது தான் ரூல்ஸ்! -
மைனாரிட்டி திமுக டூ தொடர்ந்து வென்ற அதிமுக.. தமிழகத்தில் கடைசி 5 தேர்தல்களில் என்ன நடந்தது? டேட்டா -
2021-ல் சட்டமன்ற தேர்தல், வாக்கு எண்ணிக்கை எப்போது நடைபெற்றது தெரியுமா? இதோ விவரம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு?












Click it and Unblock the Notifications