கட்சியும் சின்னமும் எங்களுக்கே.. தேர்தல் ஆணையத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் கடிதம்
அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே வழங்கக்கோரி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி: அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே வழங்கக்கோரி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தது. இதைத்தொடர்ந்து இரட்டை இலைச்சின்னம் மற்றும் கட்சி தங்களுக்கே சொந்தம் எனக் கூறி இரு அணிகளும் தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை தாக்கல் செய்தன.

இந்நிலையில் சமீபத்தில் இரு அணிகளும் இணைந்தன. இதைத்தொடர்ந்து கடந்த 12ஆம் தேதி ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
தீர்மானங்கள் நிறைவேற்றம்
இக்கூட்டத்தில், பொதுச்செயலர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டார். கட்சியை வழிநடத்த, ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆவணங்கள் தாக்கல்
இந்த தீர்மானங்கள் மற்றும் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தில் அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி.சண்முகம், உதயகுமார், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன் ஆகியோர் இன்று தாக்கல் செய்தனர்.
சின்னம், கட்சி தங்களுக்கே
அப்போது கட்சி, இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே வழங்கக்கோரி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் கடிதம் வழங்கப்பட்டது.
அணிகள் இணைந்துவிட்டன
அதில், எம்எல்ஏக்கள், எம்.பி.,க்கள் இணைந்து விட்டதாகவும், இணைப்பை பொதுக்குழு அங்கீகரித்து விட்டதால் கட்சியும் சின்னமும் தங்களுக்கே சொந்தம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவிலிருந்து சசிகலா நீக்கப்பட்டு விட்டதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications