'லாபி'யால் தூக்கியடிப்பட்ட மும்பை போலீஸ் கமிஷனர்.. ஷீனா போரா கொலை வழக்கை விசாரிக்கவும் மறுப்பு!
மும்பை: ஊர்க்காவல்படைக்கு தூக்கியடிக்கப்பட்ட மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த ராகேஷ் மரியா சர்ச்சைக்குரிய ஷீனா போரா வழக்கை விசாரிக்க மறுத்துவிட்டார்.
நாட்டையே உலுக்கி வரும் ஷீனா போரா வழக்கை விசாரிக்கும் விசாரணைக் குழுவின் தலைவராக இருந்தவர் ராகேஷ் மரியா. இந்த வழக்கு தொடர்பாக நாள்தோறும் செய்தியாளர்களை சந்தித்தும் வந்தார்.

இவர் ஏற்கனவே லலித் மோடியை லண்டனில் சந்தித்த விவகாரமும் விஸ்வரூபமெடுத்திருந்தது. இந்த நிலையில் திடீரென ராகேஷ் மரியாவுக்கு புரமோஷன் கொடுத்து ஆனால் ஊர்க்காவல் படைக்கு தூக்கியடிக்கப்பட்டார்.
ஊர்க்காவல்படை தலைமை இயக்குநராக இருந்த அஹமது ஜாவேத், மும்பை கமிஷனராக நியமிக்கப்பட்டனர்.
ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பான விசாரணையில் வழக்கமான நடைமுறைக்கு மாறாக, தனது சுயவிருப்பத்தின்படி செயல்பட்டதால் ராகேஷ் மரியா தூக்கியடிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய மாநில உள்துறை அமைச்சத்தின் கூடுதல் தலைமைச் செயலர் கே.பி.பக்ஷி. மும்பை கமிஷனர் பொறுப்பிலிருந்து ராகேஷ் மரியா விடுவிக்கப்பட்டதற்கும், ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஷீனா போரா கொலை வழக்கு விசாரணைக்கு தாம் தலைமை வகிக்கப் போவது இல்லை என்று ராகேஷ் மரியா கூறியுள்ளார். மேலும் ராகேஷ் மரியாவுக்கு எதிரான ஐ.பி.எஸ். அதிகாரிகள் லாபிதான் அவரை தூக்கியடிக்கக் காரணமாக இருந்தது என்றும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் மகாராஷ்டிராவில் ஹாட் டாபிக்காக வெடித்துள்ளது.












Click it and Unblock the Notifications