அவுட்லுக் நிறுவனர் வினோத் மேத்தா காலமானார்! பிரதமர் மோடி இரங்கல்!!
டெல்லி: முதுபெரும் பத்திரிகையாளரும் அவுட்லுக் இதழின் நிறுவனருமான வினோத் மேத்தா இன்று டெல்லியில் காலமானார்.
பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் 1942 ஆம் ஆண்டு வினோத் மேத்தா பிறந்தார். பின்னர் லக்னோவில் அவரது குடும்பம் குடியேறியது.
அங்கு தனது பள்ளிப்படிப்பை முடித்த நிலையில் 1974 ஆம் ஆண்டு 'டெபோனேர்' இதழில் எடிட்டராக பொறுப்பேற்றார்.

பின்னர் டெல்லியில் குடியேறிய அவர் சண்டே அப்சர்வர், இண்டியன் போஸ்ட், தி இண்டிபெண்டன்ட் ஆகிய பத்திரிகைகளிலும் எடிட்டராக பணிபுரிந்து முத்திரை பதித்தார். அதன் பின் அவுட்லுக் இதழை நிறுவிய அவர், அதன் தலைமை பதிப்பாசிரியராகவும் பொறுப்பு வகித்தார்.
இந்நிலையில் இன்று அவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
வெளிப்படையாகவும், நேரடியாகவும் கருத்து தெரிவிப்பவரான வினோத் மேத்தா மிகப்பெரிய பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும் என்றும் நினைவில் இருப்பார் என்று கூறியுள்ள மோடி, மேத்தாவை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications