ஆபரேஷன் ராஹத்தின் கடைசி நாளில் மட்டும் சனாவில் இருந்து 630 பேர் மீட்பு
டெல்லி: ஆபரேஷன் ராஹத்தின் கடை நாள் அன்று மட்டும் ஏமனில் இருந்து 630 பேரை மீட்டு விமானம் மூலம் இந்தியா அழைத்து வந்ததாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமனில் சிக்கித் தவித்த 4 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணிக்கு ஆபரேஷன் ராஹத் என்று பெயரிடப்பட்டது. மீட்பு பணிகளை பார்வையிட வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் ஏமனின் அண்டை நாடான ஜிபோத்தியில் முகாமிட்டிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் செய்யது அக்பருத்தீன் கூறுகையில்,
ஏடன் துறைமுகத்தில் குண்டுவெடித்ததை அடுத்து ஏமனில் நிலைமை மேலும் மோசமாகியுள்ளது. சனா நகருக்கு அழைத்து வரப்பட்ட இந்தியர்கள் விமானங்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். சனாவில் உள்ள இந்திய தூதரகத்ததை மூடிவிட்டு அங்கிருக்கும் அதிகாரிகளை வேறு இடத்திற்கு அனுப்ப வேண்டும்.
மீட்பு பணியின் இறுதி நாள் அன்று மட்டும் சனாவில் இருந்து 630 பேரை விமானம் மூலம் மீட்டுள்ளோம். இதன் மூலம் சனாவில் இருந்து விமானம் மூலம் மீட்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 900 ஆக அதிகரித்துள்ளது. அவர்கள் 18 சிறப்பு விமானங்கள் மூலம் மீ்ட்கப்பட்டுள்ளனர்.
மார்ச் மாதம் 31ம் தேதி முதல் ஏடன், அல் ஹுதைதா மற்றும் அல் முகல்லா ஆகிய துறைமுகங்களில் இருந்து சுமார் 1, 670 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதுவரை 5 ஆயிரத்து 600 பேரை மீட்டுள்ளோம். அதில் 4 ஆயிரத்து 600 இந்தியர்கள், 41 நாடுகளைச் சேர்ந்த 960 வெளிநாட்டவர்கள் அடக்கம் என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications