பாலில் நுரை பொங்க சோப்புத் தூளை சேர்க்கிறார்கள்: மத்திய அமைச்சர் அதிர்ச்சித் தகவல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாடு முழுவதும் சுமார் 6 சதவிகித பாலில் சோப்புத்தூள் கலக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர் பால் கலப்படம் குறித்து ஆய்வு செய்வதற்காக நாடு முழுவதும் இருந்து பெறப்பட்ட 1,791 மாதிரிகள் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் 2011 ஆம் ஆண்டு ஆய்வு செய்யப்பட்டது.

இவற்றில் 68 சதவிகிதம் மாதிரிகள் தரக்குறைவாக இருந்தது. 477 மாதிரிகளில் குளுக்கோஸ் கலக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
103 மாதிரிகளில் பாலுடன் சோப்பு பவுடர் கலக்கப்பட்டிருக்கிறது. அவை எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications