"மேற்கு வங்கத்தில் அவசர நிலையைப் பிரகசனம் செய்யுங்கள்.." சொல்வது பாஜக இல்லை காங்கிரஸ்! பின்னணி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் பிர்பூம் என்ற பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 8 பேர் கொடூர தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தில் சட்ட ஒழுங்கு எந்த அளவுக்கு உள்ளது என்பதைக் காட்டும் வகையிலேயே இந்தச் சம்பவம் அமைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

மேற்கு வங்கம்
இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டிய மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலத்தில் 355வது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி அவசர நிலையைப் பிரகடனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "மேற்கு வங்கத்தில் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

சட்டம் ஒழுங்கு
பிர்பூம் மாவட்டத்தில் உள்ள ராம்பூர்ஹாட்டில் நடந்த காட்டுமிராண்டித்தனமான சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 8 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். ஜல்தா முனிசிபாலிட்டியில் உள்ள எங்கள் கவுன்சிலர் தபன் காண்டு பாயிண்ட் ப்ளான் ரேஞ்சில் இருந்து கொல்லப்பட்டார். ஆனால் இந்த வழக்கில் எந்த முறையான விசாரணையும் நடத்தப்படவில்லை. இந்தச் சம்பவங்கள் அனைத்தும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததையும், அதற்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் உடந்தையாக இருக்கிறது.

அவசர நிலை
ஆளும் திரிணாமுல் காங்கிரஸும் சரி, போலீஸ் அமைச்சரும் சரி நிலைமையை கட்டுப்படுத்துவதில் தவறிவிட்டனர். இதனால் மேற்கு வங்கத்தில் 355வது சட்டப்பிரிவை பிரகடனப்படுத்தி அவசர நிலையை பிரகனப்படுத்த வேண்டும். மாநிலத்தில் சட்ட ஒழுங்கு இவ்வளவு மோசமாகப் பாதிக்கப்பட்ட பின்னரும், 355வது சட்டப்பிரிவை மத்திய அரசு பிரகடனப்படுத்த மறுத்தே வருகிறது. இது மத்திய அரசுக்கும் மேற்கு வங்க அரசுக்கும் இடையே உள்ள மறைமுக கூட்டணியையே காட்டுகிறது" என்றார்.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
அதேபோல 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு எரிபொருள் விலை பல முறை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும் என்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். முன்னதாக அரசியலமைப்பின் விதிகளின்படி மாநில அரசு செயல்படுவதை உறுதி செய்ய மேற்கு வங்கத்தில் 355ஆவது சட்டப்பிரிவைச் செயல்படுத்த வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications