மகா. சட்டசபையில் 'பாரத் மாதா கீ ஜே'- முழக்கத்தை எழுப்ப மறுத்த மஸ்லிஸ் எம்.எல்.ஏ. சஸ்பெண்ட்
மும்பை: பாரத் மாதா கீ ஜே என்ற முழக்கத்தை எழுப்ப மறுத்ததாக கூறி மஜ்லிஸ் கட்சியின் எம்.எல்.ஏ. வரீஸ் பதான் மகாராஷ்டிர சட்டசபையில்இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றைய கூட்டத்தின்போது மஜ்லிஸ் கட்சி எம்.எல்.ஏ. வரீஸ் பதானைப் பார்த்து ‘பாரத மாதாவுக்கு ஜே' என முழக்கமிடுமாறு பா.ஜ.க. உறுப்பினர் ராம் காதம் கூறினார்.

ஆனால் அவர் சொல்ல மறுத்தார். இதையடுத்து வரிஸ் பதானை பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை அமைச்சர் ரனித் பாட்டீல் முன்மொழிந்தார். இதற்கு ஒப்புதல் அளித்ததையடுத்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இது குறித்து மஜ்லிஸ் கட்சி தலைவர் ஒவைஸி கூறுகையில், ஒரு முழக்கத்தை சொல்ல மறுப்பது கருத்து சுதந்திரம். இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் ஒரு முழக்கத்தை சொல்லவில்லை என்பதற்காக சஸ்பெண்ட் செய்வது இதுவே முதன்முறை ஆகும். மகாராஷ்டிரா சட்டசபை தவறான முன்னோடியாக மாறியுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications