குஜராத் தேர்தலில் வெற்றி பெற எதை வேண்டுமானாலும் செய்யலாமா? ப.சிதம்பரம் தாக்கு
டெல்லி: தேர்தலில் வெற்றி பெற எதை வேண்டுமானாலும் செய்யலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளார், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் சீனியர் தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம்.
முன்னாள் துணை குடியரசு தலைவர், முன்னாள் பிரதமர் ஆகியோர், பாகிஸ்தான் அதிகாரிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்தியதாக பிரதமர் நரேந்திர மோடி குஜராத் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பேசிய நிலையில், அதை விமர்சனம் செய்யும் விதமாக ப.சிதம்பரம் இவ்வாறு கூறியுள்ளார்.

டிவிட்டரில் சிதம்பரம் இதுகுறித்து கூறியுள்ளதாவது:
முன்னாள் துணை குடியரசு தலைவர் மற்றும் முன்னாள் பிரதமருக்கு எதிராக இப்படி ஒரு குற்றச்சாட்டை சுமத்தி ஒரு தேர்தலில் வெற்றிபெறுவது முக்கியமானதா?
Is winning an election so important that such allegations can be made against a former Prime Minister and a former Vice President?
— P. Chidambaram (@PChidambaram_IN) December 11, 2017
கடந்த சில நாட்களாக குஜராத்தில் பாஜக நடத்தும் பிரசாரம், அதிலும் குறிப்பாக நேற்றைய பிரசாரம், வினோத விபரீதத்தை தாண்டியது. தேர்தல் வெற்றிக்காக ஒரு அரசியல் கட்சி எந்த அளவுக்கும் செல்லலாமா?
The BJP's campaign in Gujarat in the last few days, especially yesterday, has gone beyond bizarre. Should a political party go to any length to win an election?
— P. Chidambaram (@PChidambaram_IN) December 11, 2017












Click it and Unblock the Notifications