பிரதமர் மோடியின் கூடுதல் முதன்மை செயலாளராக பி.கே மிஸ்ரா நியமனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் கூடுதல் முதன்மை செயலாளராக முன்னாள் வேளாண்துறை செயலர் பி.கே.மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
65 வயதான பி.கே. மிஸ்ரா 2001 முதல் 2004 வரை மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தபோது அவருடைய முதன்மை செயலாளராக பணியாற்றினார். பிறகு 2004 டிசம்பர் 1ந் தேதி முதல் 2008 ஆகஸ்ட் 31ந் தேதி வரை வேளாண்துறை செயலராக இருந்தார்.

2008-ல் ஒய்வுப் பெற்ற பிறகு ஐந்து ஆண்டுகள் குஜராத் மாநிலத்தின் மின்சார ஓழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக பணியாற்றினார்.
மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் மிஸ்ரா. அவர் மத்திய அரசிலும், குஜராத் அரசிலும் பல்வேறு பதவிகளில் வகித்தவர் ஆவார். மேலும் இந்திய தொலைதொடர்பு ஓழங்குமுறை ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது இரண்டாவது முறையாக பிரதமர் அலுவலகத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications