பத்மநாபசுவாமி கோவில் சொத்து கணக்கெடுக்கும் பணி ஜூன் மாதம் தொடக்கம்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் பொக்கிஷங்களை கணக்கெடுக்கும் பணி ஜூன் மாதம் முதல் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரசித்திப் பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர, வைடூரிய பொக்கிஷங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து இந்த பொக்கிஷங்கள் பற்றி கணக்கெடுக்க உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கணக்கெடுக்கும் பணிக்கு உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு வக்கீல் கோபால் சுப்பிரமணியம் என்பவர் பத்மநாபசுவாமி கோவில் பொக்கிஷங்கள் பற்றி ஆய்வு செய்து உச்சநீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில், பத்மநாபசுவாமி கோவில் ரகசிய அறைகளில் இருந்த பொக்கிஷங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், போலி நகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் திருவிதாங்கூர் ராஜ குடும்பத்துக்கும் தொடர்பு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து உச்சநீதிமன்றம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு திருவனந்தபுரம் மாவட்ட கூடுதல் நீதிபதி இந்திரா தலைமையில், 6 பேர் கொண்ட குழுவை நியமித்தது. இவர்கள் பத்மநாபசாமி கோவில் நிர்வாகத்தை மேற்கொள்ளும் பணியை ஏற்றுக்கொண்டனர்.
திருவிதாங்கூர் ராஜ குடும்பத்தினரும் தங்களிடம் இருந்த பத்மநாபசுவாமி கோவில் சாவிகளை அந்த குழுவிடம் ஒப்படைத்தனர். தற்போது அந்த குழுவினர் பத்மநாபசுவாமி கோவிலை நிர்வகித்து வருகிறார்கள்.
இதற்கிடையில், கோவில் சொத்துக்கள் குறித்த விவரங்களை சேகரிக்க ஓய்வு பெற்ற கணக்கு தணிக்கை அதிகாரி வினோத்ராய் தலைமையில் இன்னொரு புதிய குழுவை அமைத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து அதிகாரி வினோத்ராய், திருவனந்தபுரம் வந்தார். அவர், கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பத்மநாபசுவாமி கோவிலின் கடந்த 25 வருட வரவு-செலவு விவரங்களை ஆய்வு செய்யவும், மேலும் சொத்துக்கள் பற்றி கணக்கெடுக்கவும், முடிவு செய்யப்பட்டது. மேலும், கோவில் சொத்துக்கள் கணக்கெடுப்பு பணிக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு திருவிதாங்கூர் ராஜ குடும்பத்தினருக்கு கடிதம் மூலம் தகவலும் கொடுக்கப்பட்டுள்ளது.
தனது 2 நாள் ஆய்வை முடித்துக்கொண்டு வினோத் ராய் டெல்லி சென்றுள்ளார். அவர், விரைவில் மீண்டும் திருவனந்தபுரம் வருகிறார். அப்போது கோவில் சொத்துக்கள் பற்றிய கணக்கெடுப்பு பணி தொடங்க உள்ளது. அடுத்த மாதம் (ஜூன்) இந்த பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications