அந்த மனசுதான் சார் கடவுள்.. இந்தியாவின் மனிதாபிமான செயல்.. பாகிஸ்தான் நெகிழ்ச்சி
ஶ்ரீநகர்: பஹல்காம் தாக்குதல், சிந்தூர் பதிலடி, சிந்து நதி நீர் ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு விவாகரங்களில் இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் நிலவி வருகிறது. இருநாட்டு உறவில் தொடர் விரிசல் ஏற்பட்டு வருகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்த முறிவால் தகவல் பரிமாற்றம் முற்றிலும் முடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியா மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தான் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலுக்கு இந்தியா சார்பில், ஆபரேஷன் சிந்தூர் என்கிற பெயரில் பதிலடி கொடுக்கப்பட்டது. இது இரண்டு நாடுகள் இடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தியது. இது இந்தியா - பாகிஸ்தான் உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. போர் நின்றாலும் இந்தியா - பாகிஸ்தான் உறவு சுமூகமாக இல்லை.

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து
அதன் தொடர்ச்சியாக சிந்து நதி நீர் ஒப்பந்தமும் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இது பாகிஸ்தான் நாட்டிற்கு அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பாகிஸ்தான் பலமுறை இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்தும், கோரிக்கை வைத்தும் பார்த்துவிட்டது. ஆனால் ஒப்பந்தம் ரத்து செய்ததில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய அரசு சொல்லிவிட்டது.
இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் இடையே கடந்த 1960 ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தப்படி சிந்து நதியின் துணை நதிகளான சட்லஜ், பியாஸ், ரவி தண்ணீர் இந்தியாவுக்கும் சிந்து, செனாப், ஜீலம் ஆகிய நதிகளின் தண்ணீர் பாகிஸ்தான் நாட்டிற்கும் ஒதுக்கப்பட்டிருந்தது.
வெள்ள அபாய எச்சரிக்கை
மேலும், இந்த ஒப்பந்தம் இருந்தபோது நீர் மட்டம், வெள்ள அபாயம் உள்ளிட்டவை குறித்து இந்தியா, பாகிஸ்தான் இரண்டு நாடுகளும் தகவல் பரிமாறி வந்தனர். ஆனால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் அனைத்து விதமான தகவல் பரிமாற்றமும் நிறுத்தப்பட்டது. இதனால் பாகிஸ்தான் கடுமையான அதிருப்தியில் இருந்து வருகிறது.
இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகளில் தண்ணீர் அதிகளவு செல்கிறது. தாவி நதியில் தண்ணீர் அதிகளவு செல்வதால் மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தானுக்கு, இந்தியா வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் வலுப்பெறுமா உறவு
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை கூறுகையில், "சிந்து நதி ஒப்பந்தம் இருந்தபோது இந்த தகவல்கள் சிந்து நதிநீர் ஆணையர் மூலம் பரிமாறப்பட்டது. தாவி நதியை பொறுத்தவரை இது இமயமலையில் உற்பத்தியாகி, ஜம்மு காஷ்மீர் வழியாக பாகிஸ்தானின் செனாப் நதிக்கு செல்கிறது. மழை காரணமாக அங்கு அதிகளவு தண்ணீர் உள்ளது.
இதனால் இந்திய தூதர் மூலமாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் எல்லையில் ஒலிப்பெருக்கி மூலமாகவும் பாகிஸ்தான் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. " என்றனர். இது பாகிஸ்தானுக்கு உதவியாக அமைந்துள்ளது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் உறவு மீண்டும் வலுபெறுவதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.
-
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு












Click it and Unblock the Notifications