Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த மனசுதான் சார் கடவுள்.. இந்தியாவின் மனிதாபிமான செயல்.. பாகிஸ்தான் நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

ஶ்ரீநகர்: பஹல்காம் தாக்குதல், சிந்தூர் பதிலடி, சிந்து நதி நீர் ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு விவாகரங்களில் இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் நிலவி வருகிறது. இருநாட்டு உறவில் தொடர் விரிசல் ஏற்பட்டு வருகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்த முறிவால் தகவல் பரிமாற்றம் முற்றிலும் முடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியா மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தான் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலுக்கு இந்தியா சார்பில், ஆபரேஷன் சிந்தூர் என்கிற பெயரில் பதிலடி கொடுக்கப்பட்டது. இது இரண்டு நாடுகள் இடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தியது. இது இந்தியா - பாகிஸ்தான் உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. போர் நின்றாலும் இந்தியா - பாகிஸ்தான் உறவு சுமூகமாக இல்லை.

Pakistan Sindhu water

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து

அதன் தொடர்ச்சியாக சிந்து நதி நீர் ஒப்பந்தமும் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இது பாகிஸ்தான் நாட்டிற்கு அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பாகிஸ்தான் பலமுறை இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்தும், கோரிக்கை வைத்தும் பார்த்துவிட்டது. ஆனால் ஒப்பந்தம் ரத்து செய்ததில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய அரசு சொல்லிவிட்டது.

இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் இடையே கடந்த 1960 ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தப்படி சிந்து நதியின் துணை நதிகளான சட்லஜ், பியாஸ், ரவி தண்ணீர் இந்தியாவுக்கும் சிந்து, செனாப், ஜீலம் ஆகிய நதிகளின் தண்ணீர் பாகிஸ்தான் நாட்டிற்கும் ஒதுக்கப்பட்டிருந்தது.

வெள்ள அபாய எச்சரிக்கை

மேலும், இந்த ஒப்பந்தம் இருந்தபோது நீர் மட்டம், வெள்ள அபாயம் உள்ளிட்டவை குறித்து இந்தியா, பாகிஸ்தான் இரண்டு நாடுகளும் தகவல் பரிமாறி வந்தனர். ஆனால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் அனைத்து விதமான தகவல் பரிமாற்றமும் நிறுத்தப்பட்டது. இதனால் பாகிஸ்தான் கடுமையான அதிருப்தியில் இருந்து வருகிறது.

இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகளில் தண்ணீர் அதிகளவு செல்கிறது. தாவி நதியில் தண்ணீர் அதிகளவு செல்வதால் மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தானுக்கு, இந்தியா வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் வலுப்பெறுமா உறவு

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை கூறுகையில், "சிந்து நதி ஒப்பந்தம் இருந்தபோது இந்த தகவல்கள் சிந்து நதிநீர் ஆணையர் மூலம் பரிமாறப்பட்டது. தாவி நதியை பொறுத்தவரை இது இமயமலையில் உற்பத்தியாகி, ஜம்மு காஷ்மீர் வழியாக பாகிஸ்தானின் செனாப் நதிக்கு செல்கிறது. மழை காரணமாக அங்கு அதிகளவு தண்ணீர் உள்ளது.

இதனால் இந்திய தூதர் மூலமாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் எல்லையில் ஒலிப்பெருக்கி மூலமாகவும் பாகிஸ்தான் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. " என்றனர். இது பாகிஸ்தானுக்கு உதவியாக அமைந்துள்ளது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் உறவு மீண்டும் வலுபெறுவதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+