நாங்கள் சொல்லியிருக்கிறோம், செய்வதாக பாக். பிரதமர் கூறியிருக்கிறார் -குர்ஷித்
டெல்லி: மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பாகிஸ்தான் பிரதமரிடம் முன் வைத்துள்ளோம். அவரும் அதுகுறித்து செய்வதாக உறுதியளித்துள்ளார் என்று கூறியுள்ளார் மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நமது முக்கியப் பிரச்சினைகள் குறித்து பாகிஸ்தான் பிரதமரிடம் நமது பிரதமர் எடுத்து வைத்துள்ளார். அனைத்துக் கவலைகளையும் நாம் தெரிவித்துள்ளோம். அதை செய்ய முடியாது என்று அவர்கள் சொல்லவில்லை. அவர்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் விளக்கினார் பாகிஸ்தான் பிரதமர்.

பாகிஸ்தான் பிரதமர் ஒரு நாட்டின் தலைவர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர். அவரிடம் போய் நீங்கள் சொல்வதை நம்ப முடியாது என முகத்தில் அடித்தாற் போல கூற முடியாது. நமது கவலைகளை தெளிவாக எடுத்து வைத்துள்ளோம். அவரும் உறுதியளித்துளளார்.
தாவூத் இப்ராகிம் குறித்து பாகிஸ்தான் பிரதமரிடம் பேசும் திட்டம் நமது பிரதமரிடம் இல்லை. அதேசமயம் ஹபீஸ் சயீத் குறித்து பிரதமர் பேசினார். பாகிஸ்தான் பிரதமரும், சயீத்தை நாங்கள் கைது செய்தோம். ஆனால் கோர்ட் ஜாமீனில் விடுதலை செய்து விட்டது என்றார்.
மேலும் அவர் கூறுகையில், எந்தத் தனிப்பட்ட நபர் குறித்தும் பாகிஸ்தான் பிரதமரிடம், நமது பிரதமர் பேசவில்லை. நமக்கென்று ஒரு அளவு உள்ளது. அதற்குட்பட்டுத்தான் பேச முடியும். நம்மிடம் உள்ள ஆவணங்களை அவரிடம் கொடுத்துள்ளோம். அவர்கள்தான் பதிலளிக்க வேண்டும் என்றார் குர்ஷித்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications