பொக்ரானில் ஒரு பிடி மண்ணை அள்ள 16 வருடமாக போராடும் பாகிஸ்தான்!
ஜெய்ப்பூர்: இந்தியா அணுகுண்டு சோதனை நடத்திய ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இருந்து மணல் மாதிரியை எடுக்க அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானின் உளவு அமைப்புகள் தொடர்ந்து முயற்சி செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1998ம் ஆண்டு மே 11ம் தேதி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மத்தியில் ஆட்சி செய்தபோது ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. உலகிலேயே அணுகுண்டு சோதனை நடத்திய ஆறாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

அமெரிக்கா அதிர்ச்சி
அணுகுண்டு சோதனை நடந்தபோது நவீன உளவு கருவிகளை வைத்துள்ள அமெரிக்காவாலேயே அதை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தியா அறிவித்தபிறகுதான் அமெரிக்கா அதிர்ச்சியடைந்தது. அதன்பிறகு இந்தியாமீது பொருளாதார தடையை விதித்தது.

அப்துல் கலாம் டீம்
அப்துல் கலாம் தலைமையிலான இந்திய விஞ்ஞானிகளின் இந்த 'கண்மூடி வித்தையை' கண்டுபிடிக்க அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பும்,. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பும் அப்போது முதல் இப்போது வரை தொடர்ந்து முயன்று வருவதாக இந்திய உளவுத்துறை கூறுகிறது.

அணுகுண்டு சோதனை .இடத்துக்குள் நுழைய முடியவில்லை-சிஐஏ
ஆயினும் எல்லை பாதுகாப்பு படையினரின் தீவிர கண்காணிப்பை மீறி வெடிகுண்டு சோதனை நடந்த இடத்துக்கு யாராலும் செல்ல முடியவில்லை. தங்களால் முயன்று பார்த்தும், அணுகுண்டு சோதனை நடந்த இடத்துக்குள் நுழைய முடியவில்லை என்பதை சிஐஏ அமைப்பின் முன்னாள் இயக்குநர் ஜார்ஜ் டெனன்ட் ஒப்புக்கொள்கிறார்.

மணலை எடுத்துச் சென்று...
அணுகுண்டு சோதனை நடந்த இடத்திலுள்ள மணலை எடுத்துச் சென்று, அணுகுண்டின் தன்மையை கண்டுபிடிக்க பாகிஸ்தான் முயன்றுவந்தாலும் அதை தகுந்த பாதுகாப்பு மூலம் தடுத்து வருகிறோம் என்று இந்திய உளவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

ஒருபிடி மண்ணைக்கூட..
அணுகுண்டு வெடிப்பு நடத்தப்பட்ட இடத்தில் இருந்து பல கிலோமீட்டர் சுற்றளவுக்கு ராணுவத்தினர் நிறுத்தப்பட்டு நான்கு கட்ட சோதனைகளுக்கு பிறகே அப்பகுதிக்குள் யாரும் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். அணுகுண்டு சோதனை நடந்து 16 ஆண்டுகள் ஆன பிறகும் அங்கிருந்து
ஒருபிடி மண்ணைக்கூட அன்னிய நாட்டுக்கு விட்டுத்தராமல் தீரத்துடன் பாதுகாத்து வருகிறார்கள் நமது ராணுவ வீரர்கள்.
-
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..!












Click it and Unblock the Notifications