பொக்ரானில் ஒரு பிடி மண்ணை அள்ள 16 வருடமாக போராடும் பாகிஸ்தான்!
ஜெய்ப்பூர்: இந்தியா அணுகுண்டு சோதனை நடத்திய ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இருந்து மணல் மாதிரியை எடுக்க அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானின் உளவு அமைப்புகள் தொடர்ந்து முயற்சி செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1998ம் ஆண்டு மே 11ம் தேதி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மத்தியில் ஆட்சி செய்தபோது ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. உலகிலேயே அணுகுண்டு சோதனை நடத்திய ஆறாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

அமெரிக்கா அதிர்ச்சி
அணுகுண்டு சோதனை நடந்தபோது நவீன உளவு கருவிகளை வைத்துள்ள அமெரிக்காவாலேயே அதை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தியா அறிவித்தபிறகுதான் அமெரிக்கா அதிர்ச்சியடைந்தது. அதன்பிறகு இந்தியாமீது பொருளாதார தடையை விதித்தது.

அப்துல் கலாம் டீம்
அப்துல் கலாம் தலைமையிலான இந்திய விஞ்ஞானிகளின் இந்த 'கண்மூடி வித்தையை' கண்டுபிடிக்க அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பும்,. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பும் அப்போது முதல் இப்போது வரை தொடர்ந்து முயன்று வருவதாக இந்திய உளவுத்துறை கூறுகிறது.

அணுகுண்டு சோதனை .இடத்துக்குள் நுழைய முடியவில்லை-சிஐஏ
ஆயினும் எல்லை பாதுகாப்பு படையினரின் தீவிர கண்காணிப்பை மீறி வெடிகுண்டு சோதனை நடந்த இடத்துக்கு யாராலும் செல்ல முடியவில்லை. தங்களால் முயன்று பார்த்தும், அணுகுண்டு சோதனை நடந்த இடத்துக்குள் நுழைய முடியவில்லை என்பதை சிஐஏ அமைப்பின் முன்னாள் இயக்குநர் ஜார்ஜ் டெனன்ட் ஒப்புக்கொள்கிறார்.

மணலை எடுத்துச் சென்று...
அணுகுண்டு சோதனை நடந்த இடத்திலுள்ள மணலை எடுத்துச் சென்று, அணுகுண்டின் தன்மையை கண்டுபிடிக்க பாகிஸ்தான் முயன்றுவந்தாலும் அதை தகுந்த பாதுகாப்பு மூலம் தடுத்து வருகிறோம் என்று இந்திய உளவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

ஒருபிடி மண்ணைக்கூட..
அணுகுண்டு வெடிப்பு நடத்தப்பட்ட இடத்தில் இருந்து பல கிலோமீட்டர் சுற்றளவுக்கு ராணுவத்தினர் நிறுத்தப்பட்டு நான்கு கட்ட சோதனைகளுக்கு பிறகே அப்பகுதிக்குள் யாரும் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். அணுகுண்டு சோதனை நடந்து 16 ஆண்டுகள் ஆன பிறகும் அங்கிருந்து
ஒருபிடி மண்ணைக்கூட அன்னிய நாட்டுக்கு விட்டுத்தராமல் தீரத்துடன் பாதுகாத்து வருகிறார்கள் நமது ராணுவ வீரர்கள்.
-
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications