'புல்’அறுக்க எல்லை தாண்டியவர் சுட்டுக்கொலை: இந்திய தூதருக்கு பாக். சம்மன்
டெல்லி: எல்லை தாண்டிய பாகிஸ்தானியரை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்ற விவகாரம் தொடர்பாக இந்தியத் தூதரை நேரில் ஆஜராகுமாறு பாகிஸ்தான் அரசு சம்மன் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தானை சேர்ந்த தவுகீர் என்பவர் எல்லையில் நரோவால் என்ற இடத்தில் புல் அறுத்துக் கொண்டிருந்தார். அவருடன் மேலும் 2 பேர் இருந்தனர்.

அப்போது கவனக் குறைவாக எல்லைதாண்டிய தவுகீரை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் எந்தவித முன்னெச்சரிக்கையும் செய்யாமல் சுட்டனர். இதனால் காயம் அடைந்த அவரை பாகிஸ்தான் படையினரிடம் ஒப்படைக்க மறுத்து விட்டனர். பின்னர் அவர் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பிலேயே உயிரிழந்தார்.
இதே போன்று முகமது தின் என்பவரும் சர்வதேச எல்லை கட்டுப்பாடு பகுதியில் ராவ்லா கோட் என்ற இடத்தில் இந்திய படைகளால் சுட்டு கொல்லப்பட்டார். இந்திய வீரர்கள் எல்லையில் கட்டுப்பாடு விதிமுறைகளை மீறி வருகின்றனர்.
எனவே, இந்தியா பொது மக்களின் உயிர்களை மதிக்க வேண்டும். விதிமுறை மீறி துப்பாக்கி சூடு நடத்த கூடாது. அதனால் ‘‘மதிப்பு மிக்க உயிர்கள் இழப்பு ஏற்படுகிறது‘‘ என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஆகஸ்டு மாதத்தில் தவறுதலாக எல்லை தாண்டி வந்த இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரரை நல்லமுறையில் நடத்தி நல்லெண்ண அடிப்படையில் அவரை பாகிஸ்தான் ராணுவம் திரும்ப ஒப்படைத்தது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சமீபத்தில் எல்லையில் நடந்த துப்பாக்கி சண்டையில் இரு தரப்பிலும் 20 பேர் பலியாகினர். காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவ உதவுவதற்காகவே பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு மற்றும் குண்டு வீசுவதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications