For Daily Alerts
Just In
எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்! இந்திய நிலைகள் மீது தாக்குதல்!!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் இந்திய நிலைகளை இலக்கு வைத்து இன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இன்று அதிகாலை 12.35 மணியளவில் பீம்பெர்-காலி- காம்பீர் முன்னரங்க நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதைத் தொடர்ந்து இந்திய படைகளும் பதில் தாக்குதலை நடத்தின. இருதரப்பினரிடையேயான துப்பாக்கிச் சண்டை சுமார் 1 மணி நேரம் நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மோதலில் வீரர்களுக்கு படுகாயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை. முன்னதாக கடந்த 17,18-ந் தேதிகளிலும் சம்பா பகுதியில் பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
English summary
Pakistani troops on Friday violated the ceasefire and targeted Indian posts with automatic and small weapons along the Line of Control (LoC) in Poonch district of Jammu and Kashmir, prompting Indian forces to retaliate effectively.
Story first published: Friday, June 27, 2014, 12:40 [IST]