எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: உலக கோப்பை போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதும் நிலையில், ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு, இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.

போர் நிறுத்த ஒப்பந்ததிற்கு பிறகும், அடிக்கடி துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில் இன்று மாலை திடீர் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான். இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது.

Pakistan violates ceasefire along the LoC in Poonch sector. Indian Army retaliating.

தீவிரவாதிகளை ஒழித்து கட்ட பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதலை அரங்கேற்றி உள்ளது.
இதற்கிடையே, புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நீடித்து வந்த நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் எதிர்கொண்டுள்ளன. இதுவரை மோதிய அனைத்து போட்டிகளிலும், இந்திய அணிகளே வெற்றிகளை குவித்துள்ளன.

இந்தநிலையில், ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு, இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

எனினும், எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தலாம் என்பதால் இந்திய படை உஷார்படுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+