ஜம்மு காஷ்மீர்: ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டு கொலை- பாக். திடீர் தாக்குதலுக்கும் செம்ம பதிலடி!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 5 பாகிஸ்தான் தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதனைத் தொடர்ந்து நேற்று எல்லையில் திடீரென பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலுக்கு நமது ராணுவம் அதிரடியான பதிலடி கொடுத்தது.
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவ காத்திருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து குப்வாரா மாவட்டம் மச்சில் செக்டார் எல்லை பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது எல்லையில் ஊடுருவ பதுங்கியிருந்த தீவிரவாதிகள் நடமாட்டத்தை கண்காணித்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனையடுத்து பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த படியே பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை பல மணிநேரம் நீடித்தது.
எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் மீதான இத்தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். இருப்பினும் எல்லையில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியை தொடருகின்றனர். பாகிஸ்தானில் இருந்து அனுப்பி வைக்கப்படும் பயங்கரவாதிகளை எல்லைகளில் தொடர்ந்து ராணுவத்தினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர். இது தொடர்பான மோதல்களில் கடந்த சில வாரங்களில் மொத்தம் 10 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் திடீர் தாக்குதல்: இதனிடையே ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு திடீரென தாக்குதல் நடத்தியது. இந்திய நிலைகளை இலக்கு வைத்து பீரங்கி தாக்குதல்களையும் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டது. இதனால் எல்லைகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு நமது ராணுவத்தின் தரப்பிலும் கடும் பதிலடி தரப்பட்டது. பாகிஸ்தானின் தாக்குதலில் படுகாயமடைந்த ராணுவ வீரர் ஒருவர் ஜம்முவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பயங்கரவாதிகள் ஊடுருவலை முறியடித்த ஆத்திரத்தில் பாகிஸ்தான் எல்லையில் திடீர் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்கின்றன பாதுகாப்பு படை வட்டாரங்கள்.
-
குழாய் வழி எரிவாயு இணைப்பு வைத்திருப்போருக்கு கட்டுப்பாடு! மத்திய அரசு கொடுத்த எச்சரிக்கை! -
“இந்தியா எங்கள் நண்பன்”.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களை அனுமதிக்கும் ஈரான்! ஸ்பெஷல் பவர்! -
இந்திய கப்பல்களுக்கு அனுமதி? ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி! பிரச்சனை தீருமா! -
ஜிகிரி தோஸ்த்து.. நாங்க ஹெல்ப் பண்ணுவோம்! இக்கட்டான நேரத்தில் இந்தியாவுக்கு ஈரான் உதவி! மேட்டர் ஓவர் -
வங்கதேசம் மட்டுமில்லை.. இந்தியாவிடம் கெஞ்சும் இலங்கை - மாலத்தீவு.. ஈரான் போரால் மாறிய நிலைமை -
மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்கினால்.. யாரும் பெண்களை வேலைக்கு எடுக்க மாட்டார்கள்- உச்ச நீதிமன்றம்! -
ஹார்முஸ் முடங்கினாலும் பிரச்சனை வராது.. LPG சிக்கலுக்கு உள்நாட்டிலேயே இருக்கும் தீர்வு! இது தெரியுமா -
"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா? -
உள்நாட்டிலேயே கேஸ் இல்லாத போது.. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி படுஜோர்.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்!











Click it and Unblock the Notifications