எல்லையில் இந்தியா தடுப்பு சுவர் அமைக்கிறது... ஐ.நா.விடம் பாக். புலம்பல்
டெல்லி: எல்லையில் 10 மீட்டர் உயரத்துக்கு தடுப்பு சுவர் அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக ஐ.நா. சபைக்கு பாகிஸ்தான் கடிதம் மூலம் புகார் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். எல்லையோர கிராமங்களில் பொதுமக்களை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதர் லோதி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு 2 புகார் கடிதங்கள் எழுதி உள்ளார். அதில், காஷ்மீர் சர்வதேச பிரச்னை. இதில் இன்னும் தீர்வு காணப்படவில்லை. ஆனால், ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லையில் சுமார் 192 கிமீ தொலைவுக்கு, 10 மீட்டர் உயரம் மற்றும் 135 அடி அகலத்தில் இந்தியா தடுப்புச் சுவர் கட்ட உள்ளது என கூறியுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் நியூயார்க்கில் அளித்த பேட்டியில், சரியான நேரத்தில் இதற்கு பதில் அளிப்போம் எனக் கூறி உள்ளார்.
இதனிடையே ஐ.நா. கூட்டத்தில் காஷ்மீர் பிரச்னையை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் எழுப்புவார் என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறுகையில், காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பினால் தக்க பதிலடி தரப்படும் என்று கூறி உள்ளார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications