24 மணி நேரத்தில் 20 இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்திய பாக். ராணுவம்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 20 இந்திய நிலைகளை இலக்கு வைத்து பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவோம் என்று கூறிக் கொள்ளும் பாகிஸ்தான் இடைவிடாது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதலை நடத்தி வருகிறது.
இத்தகைய எல்லை தாண்டிய தாக்குதல்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்து உள்ளன. ஆர்.எஸ் புரா, ஆர்னியா எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.
கடந்த 24 மணி நேரங்களில் 20 இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.
பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலில் ஒருவர் காயம் அடைந்துள்ளார். கடந்த 9 நாட்களில் 14வது முறையாக பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்து மீறி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.