Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிளானே வேற.. பாகிஸ்தான் நாடாளுமன்றம் திடீர் கலைப்பு! இரவோடு இரவாக அதிபர் அதிரடி! ஏன்? பரபர பின்னணி

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிய 3 நாட்கள் பாக்கி இருந்த நிலையில் முன்கூட்டியே நேற்று நள்ளிரவில் கலைக்கப்பட்டது. பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பரிந்துரையில் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அதிபர் ஆரிப் ஆல்வி உத்தரவிட்ட நிலையில் பின்னணியில் உள்ள முக்கிய காரணம் வெளியாகி உள்ளது.

இந்தியாவை போல் பாகிஸ்தானிலும் 5 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடந்து வருகிறது. பாகிஸ்தானில் கடந்த 2018 ல் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அங்கு கூட்டணி ஆட்சி அமைந்தது.

Pakistans parliament dissolved by the president after PM Shehbaz Sharifs advice

பாகிஸ்தானில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியின் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தது. இம்ரான் கான் பிரதமராக பொறுப்பேற்று 4 ஆண்டுகள் செயல்பட்டார்.

இதற்கிடையே தான் அவருக்கு வழங்கிய ஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் பெற்றனர். இதனால் இம்ரான் கான் பெரும்பான்மையை இழந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. பாகிஸ்தான் பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் ( பிஎம்எல்-என்) கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றார். இதையடுத்து இம்ரான் கான் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

நில முறைகேடு, கருவூல மோசடி தொடர்பான விசாரணைகள் தீவிரமாகின. இந்நிலையில் தான் கருவூல மோசடி வழக்கில் இம்ரான் கானுக்கு சில நாட்களுக்கு முன்பு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையால் இம்ரான் கான் 5 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை விதித்து அந்நாட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஆகஸ்ட் 12ம் தேதி வரை இருக்கும் நிலையில் முன்கூட்டியே அவர் கலைக்க உள்ளதாகவும் விரைவில் அவர் அதிபர் ஆரிப் ஆல்விக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

அதன்படி நேற்று இரவு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பாக அதிபர் ஆரிப் ஆல்விக்கு கடிதம் எழுதினர். இதனை ஏற்றுக்கொண்ட அதிபர் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக இரவோடு, இரவாக அறிவித்துள்ளார். இதற்கிடையே தான் நாடாளுமன்றம் கலைப்புக்கு பின்னணியில் உள்ள பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது பாகிஸ்தானை பொறுத்தமட்டில் நாடாளுமன்றம் 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் பட்சத்தில் அடுத்த 60 நாட்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மாறாக நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்தால் அடுத்த 90 நாட்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதால் தேர்தலுக்காக 30 நாட்கள் கூடுதல் கால அவகாசம் கிடைக்கும்.

தற்போது பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு தரப்பில் செலவினங்களும் குறைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான பணிகளை செய்ய கூடுதல் காலத்தை பெறும். இதுமட்டுமின்றி தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நாடாளுமன்ற கலைப்பின் பின்னணியில் இன்னொரு திட்டத்தையும் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அது என்னவெனில் பொருளாதார நெருக்கடி, வெள்ள பாதிப்புகளை சரியாக கையாளாமல் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும் இம்ரான் கானிடம் இருந்து அவர் ஆட்சியை பறித்துள்ளதோடுஅரசியல் காழ்ப்புணர்ச்சியால் சிறையில் அடைத்துள்ளதாக ஒரு பிம்பம் பாகிஸ்தானில் உள்ளது. இதனை உடைக்க வேண்டும். இதனை மக்கள் மத்தியில் மறக்கடிக்க செய்ய வேண்டும். மேலும் பிரதான எதிரியான இம்ரான் கான் சிறையில் உள்ளதோடு 5 ஆண்டு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை இருக்கிறது. இதனால் 30 நாள் கூடுதல் காலஅவகாசத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்த ஷெபாஸ் ஷெரீப் திட்டமிட்டு நாடாளுமன்றத்தை கலைத்துள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+