வைரல் வீடியோ.. எங்க புள்ள மேல கைவக்கிறீயா.. மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் மீது கடுமையாக தாக்குதல்
Recommended Video
சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் மாணவனை அடித்த ஆசிரியரை வகுப்பறையில் இருந்து இழுத்துவந்து பள்ளி வளாகத்தில் வைத்து மாணவனின் உறவினர்கள் கடுமையாக தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தின் சிம்டா பகுதியில் ஆஷாதீப் என்ற மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தான் மாணவனை ஆசிரியர் அடித்ததற்காக அந்த மாணவனின் பெற்றோர் ஆசிரியரை அடித்து உதைத்து உள்ளனர்.
கடந்த செவ்வாய்கிழமை சூரத்தின் ஆஷாதீப் பள்ளியில் 12 வகுப்பு மாணவர்கள் சிலர் கழிவறையில் விளையாடி கூச்சலிட்டு சேட்டைகளை செய்திருக்கிறார்கள்.

ஆசிரியர் அடித்தார்
இது பற்றி ஒரு மாணவனை அழைத்து விசாரித்துள்ளார் ஆசிரியர் விபுல் கஜாரே. அதன் பின்னர் அந்த மாணவனை கன்னத்தில் பளார் பளார் என அறைந்திருக்கிறார். இந்த காட்சி பள்ளியில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது. மேலும் பாட வேளையில் வகுப்புக்கு வெளியே நிற்கும்படி ஆசிரியர் விபுல் கஜாரே மாணவருக்கு தண்டனை கொடுத்துள்ளார். இதனால் வேதனை அடைந்த அந்த மாணவன், மற்றவர்கள் செய்த தவறுக்கு என்னை ஆசிரியர் அடித்துவிட்டதாக பெற்றோரிடம் சொல்லியிருக்கிறான்.

ஆசிரியர் மீது தாக்குதல்
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், புதன்கிழமை அதாவது நேற்று தங்களது உறவினர்களுடன் பள்ளிக்கு சென்றனர். அங்கு வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் விபுல் கஜாரேவை இழுத்து போட்டு அடிக்க ஆரம்பித்துள்ளனர். பின்னர் பள்ளி வளாகத்தில் இழுத்துபோட்ட அவர்கள் யாரையும் பேசவிடாமல் சரமாரியாக தாக்கியிருக்கிறார்கள்.
|
சிசிடிவி காட்சி பதிவு
அருகில் இருந்த சக ஆசிரியர்கள் நெருங்க முடியாமல் மிரட்டியபடி ஆசிரியரை கடுமையாக தாக்கி உள்ளார்கள் மாணவனின் உறவினர்கள். இதில் படுகாயம் அடைந்த அந்த ஆசிரியர் கஜோரா மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சூரத் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆசிரியரை மாணவனின் பெற்றோர் தாக்கும் வீடியோ காட்சி பள்ளியில் உள்ள சிசிடிவில் பதிவாகி உள்ளது.

பள்ளி நிர்வாகம் முடிவு
இதனிடையே மாணவனை தாக்கிய ஆசிரியர் காஜாரேவை பள்ளியில் இருந்து நீக்க பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கஜிராவை தாக்கிய மாணவனின் பெற்றோர் மற்ற மாணவர்களின் முன்னிலையில் மோசமான வார்த்தைகளால் ஆசிரியரை பேசியதாகவும் ஆஷதீப் பள்ளித் தலைவர் மகேஷ் ரமணி தெரிவித்தார். இதனிடையே யாரோ சில மாணவர்கள் செய்த குறும்புக்கு எங்கள் பிள்ளையை ஆசிரியர் அடித்துவிட்டதாகவும் அதனால் தான் அடித்ததாகவும் பெற்றோர் கூறியுள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications