வரவேற்பு + வழிகாட்டல்.... புதிய எம்.பிக்களை வரவேற்கத் தயார் நிலையில் டெல்லி!
டெல்லி: புதிதாக தேர்ந்தெடுக்கப்படவுள்ள எம்.பி.க்களை வரவேற்கவும், வழிகாட்டவும் நாடாளுமன்றத்தில் மிகவும் விரிவான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
16வது லோக்சபா தேர்தல் 9 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இன்று ஒரே கட்டமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மதியம் 1 மணிவாக்கில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற அணி குறித்து தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
நாளை தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார் மன்மோகன் சிங். அதனைத் தொடர்ந்து மத்தியில் வரும் 20ம் தேதிவாக்கில் புதிய ஆட்சி அமையும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ள புதிய எம்.பி.க்களை வரவேற்கவும், அவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கவும் டெல்லி தயாராகிவிட்டது.
இது தொடர்பாக நாடாளுமன்றச் செயலாளர் பி.ஸ்ரீதரன் நேற்று டெல்லியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-

தற்காலிக சபாநாயகர்...
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி புதிய அரசுடன் கலந்து ஆலோசித்து 16-வது நாடாளுமன்ற கூட்டத்தின் முதல் கூட்ட தேதியை அறிவிப்பார். புதிய அரசின் பரிந்துரையுடன் ஜனாதிபதி தற்காலிக சபாநாயகரை நியமிப்பார். பாரம்பரியமாக அவையின் மூத்த உறுப்பினர் தான் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்படுவார். ஆனால் இதற்கு விதிகள் எதுவும் இல்லை.

குழு தலைவர்கள்...
தற்காலிக சபாநாயகருடன், குழு தலைவர்களாக 2 அல்லது 3 பேரின் பெயர்களும் ஜனாதிபதிக்கு அனுப்பப்படும். ஒருவேளை ஏதேனும் காரணமாக தற்காலிக சபாநாயகர் அவைக்கு வரமுடியவில்லை என்றால் அந்த குழு தலைவர்கள் அவையை நடத்துவார்கள்.

543 எம்.பி.க்கள்...
புதிய எம்.பி.க்களின் பதவி ஏற்பு நிகழ்ச்சி குறைந்தபட்சம் 2 நாட்கள் நடைபெறும். தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 543.

4வது நாளில்...
கடந்த முறை மே 18-ந் தேதி பழைய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது. புதிய அரசு அமைக்கப்பட்டு 4-வது நாளில் நாடாளுமன்றம், மேல்-சபை ஆகிய இரு சபைகளின் கூட்டு கூட்டம் நடத்தப்பட்டது.

தற்காலிக இருப்பிடம்...
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி.க்கள் தற்காலிகமாக ஓட்டல் அசோகாவில் தங்க வைக்கப்படுவார்கள். பின்னர் அவர்களுக்கு வீட்டுவசதி குழு உரிய வீடுகளை ஒதுக்கும். புதிய எம்.பி.க்களை வரவேற்பதற்கான அனைத்து மையங்களிலும் இன்று பிற்பகலில் இருந்து பணிகள் தொடங்கிவிடும்.

6 வழிகாட்டும் மையங்கள்...
டெல்லியில் இந்திரா காந்தி உள்நாட்டு விமான நிலையம் (முனையம் 1-டி மற்றும் முனையம் 3) ஆகிய இடங்களிலும், ஹஸ்ரத் நிஜாமுதீன் ரெயில் நிலையம் உள்பட 6 இடங்களில் வழிகாட்டும் மையங்கள் புதிய உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டும் மையங்கள் 21-ந்தேதி வரை செயல்படும்.

வழிகாட்டும் மையங்கள்...
டெல்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் அறை எண் 62-ல் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் புதிய உறுப்பினர்களின் பதிவு, தற்காலிக தங்குமிடங்கள் உள்பட அனைத்துவிதமான வழிகாட்டுதல்களும் கிடைக்கும். உறுப்பினர்கள் இந்த மையத்தில் அடையாள அட்டை மற்றும் ரயில்வே சலுகை அட்டைக்கான புகைப்படங்களை எடுத்து கொள்ளலாம்.

கையேடுகள்...
இந்த மையத்தில் உறுப்பினர்களுக்கு இந்திய அரசியல்சாசனம், நாடாளுமன்ற நடத்தை விதிகள் போன்ற நூல்கள், கையேடுகள் ஆகியவையும் வழங்கப்படும். உறுப்பினர்களின் வசதிக்காக பல்வேறு தொலைபேசிகளும் காலை 10 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன' என இவ்வாறு பி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications