இப்போதெல்லாம் பருந்துகள் வருவதில்லை.. தகனத்திற்கு மாறும் பார்சிகள்!
மும்பை: பார்சி சமூகத்தினர் மிகுந்த ஆலோசனைகளுக்கு பின்னர் தற்போது இறந்தவர்களை எரியூட்டும் தகன முறைக்கு மாற ஆரம்பித்துள்ளனர். காரணம், முன்பு போல பருந்துகள் வருவதில்லை என்பதால்.
பருந்துகளுக்கும், இறுதிச் சடங்குகளுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது.? பார்சி சமூகத்தில் இறந்தவர்களின் உடல்களை எரியூட்டவோ அல்லது அடக்கம் செய்யவோமா மாட்டார்கள். மாறாக, பருந்துகள் அதைத் தின்ன விட்டு விடுவர். ஆனால் இப்போது நிலைமை மாறி விட்டது. பருந்துகளைப் பார்க்கவே முடிவதில்லை. அருகிப் போய் விட்டது. இதனால் உடல்களை எரியூட்ட ஆரம்பித்துள்ளனர் பார்சி சமூகத்தினர்.

மும்பையைச் சேர்ந்த 90 வயதான கைகோபாத் ருஸ்தம்பார்ம், தனது மறைவுக்குப் பின்னர் தனது உடலை பருந்துகள் கொத்தித் தின்னும் என்ற நம்பிக்கையில் இருந்து வந்தார். ஆனால் கடந்த மாதம் அவர் மரணமடைந்த பின்னர் அவரது உடலை எரியூட்டி இறுதிச் சடங்குகளைச் செய்தனர்.
மும்பையில் இப்போதெல்லாம் பார்சி இனத்தவர்கள் இறந்தால் உடல்களை எரியூட்டி வுருகின்றனர். மாறி வரும் காலத்திற்கேற்ப சடங்குகளிலும் அவர்கள் மாற்றத்தை ஏற்க ஆரம்பித்து விட்டனர். ருஸ்தம்பார்மின் மனைவி கோர்ஷெட், தனது 82வது வயதில் கடந்த ஜனவரியில் மரணமடைந்தார். அவரது உடலையும் எரியூட்டவே செய்தனர்.
பார்சிகளுக்கென்று நீண்ட பாரம்பரியமும், சுயேச்சையான பல பழக்க வழக்கங்களும் உள்ளன. ஜொராஸ்டிரியர்கள் என்பதுதான் பார்சி இனத்தவரின் உண்மையான பெயர். 1000 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் பெர்சியாவிலிருந்து இடம் பெயர்ந்து இந்தியாவுக்கு வந்தனர். இந்தியா இப்போது இவர்களின் தாயகமாக மாறி விட்டது. தாயகம் மாறி வந்தாலும் தங்களது, மத, இன சடங்குகளை இவர்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கிறார்கள்.
நாட்டின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களைக் கணக்கெடுத்தால் அதில் பார்சி இனத்தவர் கணிசமாக இருப்பார்கள். முக்கிய உதாரணம், தொழிலதிபர் டாடா குடும்பம். பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் பார்சி இனம் இப்போது அருகி வருகிறது.
இவர்களின் முக்கியப் பழக்க வழக்கங்களில் ஒன்றுதான் இறந்த உடல்களை பறவைகளுக்கு இரையாகப் போடுவது என்பது. ஆனால் இப்போது இது மாற ஆரம்பித்து விட்டது. இறந்தவர்களை எரியூட்ட ஆரம்பித்துள்ளனர்.
மும்பையில் இதற்காகவே இடம் உண்டு. அங்கு இறந்தவர்களின் உடல்களை வைத்து விட்டுப் போய் விடுவார்கள். ஆனால் சமீப காலமாக உடல்களை தீண்ட ஒரு பறவையும் வராத நிலை ஏற்படவே இப்போது எரியூட்டலுக்கு மாறி விட்டனர்.
இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 60,000 பார்சி இனத்தவர்கள் இருப்பதாக ஒரு புள்ளிவிவரக் கணக்கு தெரிவிக்கிறது. நாடு சுதந்திரமடைந்தபோது இந்த எண்ணிக்கை ஒன்றரை லட்சமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications