பகலில் சுட்டெரித்த வெயில்.. மாலையில் ஜில் மழை பெங்களூரில் !
பெங்களூர்: பெங்களூர் நகரின் பல இடங்களில் இன்று மாலை கனமழை பெய்தது. பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில் மழை பெய்து வெப்பத்தை தணித்தது.
லட்சத்தீவு முதல் கர்நாடகம் வரை காற்றின் மேலடுக்கில் சாதகமான சூழல் உருவாகியுள்ளதன் காரணமாக தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மாரச் 3 முதல் 7 ஆம் தேதி வரை மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது.

இன்று பகல் முழுவதும் வெயில் வாட்டி எடுத்த நிலையில் பெங்களூர் நகரின் பல பகுதிகளில் மாலையில் கனமழை பெய்தது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில நாட்களாக பெங்களூர் மத்திய பகுதி, தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் வெயில் சுட்டரித்து வந்தது. இந்த நிலையில் இன்று மாலை ஜே.பி.நகர், ராம்நகர், மடிவாலா உள்ளிட்ட பல இடங்களில் திடீரென கனமழை பெய்தது.
இதன் காரணமாக சாலையெங்கும் வெள்ளக்காடாக மாறியது, மேலும் ஆங்காங்கே குளம் போல தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்ததோடு, சில பகுதிகளில் போக்குவரத்தும் முடங்கியது. மேலும் தொட்டபல்லாபூர், ஆனைக்கால் பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்தது. அதேபோல் கேரளா மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது.












Click it and Unblock the Notifications