புதன்கிழமையும்... ராஜ்குமார் - பர்வதம்மா மரணமும்!
பெங்களூர்: ராஜ்குமார், பர்வதம்மா ஆகியோர் மறைவிலும் உள்ள ஒரு ஒற்றுமை கர்நாடக மக்களின் மனதை உருக்குவதாக அமைந்துள்ளது.
பெங்களூரு எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் உடல் நலக் குறைபாடு காரணமாக பர்வதம்மா அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 4.40 மணியளவில் மரணமடைந்தார். அவரது உடல் மகன் ராகவேந்திரா ராஜ்குமாரின் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
கன்னடத்து எம்ஜிஆர் என்று அழைக்கப்பட்டவர் ராஜ்குமார். அவர் கடந்த கடந்த 2006-ஆம் ஆண்டு, பிப்ரவரி 12-ஆம் தேதி உயிரிழந்தார். அது புதன்கிழமையாகும். அவரது மனைவி பர்வதம்மா மே 31-ஆம் தேதி இன்று உயிரிழந்துள்ளார். இன்றும் புதன்கிழமை.
உயிருடன் இருந்தபோது ராஜ்குமாரும், பர்வதம்மாவும் அவ்வளவு அன்னியோன்யமாக இருப்பார்கள். மனைவி மீது அதிக பாசம் கொண்டவர் ராஜ்குமார். அதேபோல கணவரின் உயர்வுக்கு பர்வதம்மாவின் அர்ப்பணிப்பும் ஒரு காரணம். அவரும் கூட திரைத் துறையில் சாதனை படைத்தவர்தான். இப்போது இவர்களின் மறைவும் கூட ஒரே தினத்தில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பர்வதம்மாவின் உடல், அவரது கணவர் அடக்கம் செய்யப்பட்ட ஸ்ரீ காண்டீர்வா ஸ்டுடியோவில் அடக்கம் செய்யப்படவுள்ளது.