தனியார் துறையில் எஸ்சி, எஸ்டி, பிசி-க்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு- பஸ்வான் மீண்டும் வலியுறுத்தல்
டெல்லி: தனியார் துறையில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் வேலைவாய்ப்புகள் வழங்க வகை செய்யும் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கொல்கத்தாவில் லோக் ஜனசக்தி தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தனியார் துறை வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நாடு விடுதலை அடைந்து இத்தனை ஆண்டுகாலமான பின்னரும்கூட தலித்துகள் நிலைமை மிக மோசமாக இருப்பதை பார்க்கிறோம். ஆகையால் தனியார்துறையிலும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
நாட்டின் ஒவ்வொரு தாலுகாக்களிலும் உறைவிடப் பள்ளிகளை அமைக்க வேண்டும். மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சியும் போட்டியிடும்.
இவ்வாறு பஸ்வான் கூறினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசுகையிலும் தனியார் துறையிலும் இடஒதுக்கீடு அடிப்படையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட் வேண்டும் என்பதை பஸ்வான் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications