தனியார் துறையில் எஸ்சி, எஸ்டி, பிசி-க்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு- பஸ்வான் மீண்டும் வலியுறுத்தல்
டெல்லி: தனியார் துறையில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் வேலைவாய்ப்புகள் வழங்க வகை செய்யும் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கொல்கத்தாவில் லோக் ஜனசக்தி தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தனியார் துறை வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நாடு விடுதலை அடைந்து இத்தனை ஆண்டுகாலமான பின்னரும்கூட தலித்துகள் நிலைமை மிக மோசமாக இருப்பதை பார்க்கிறோம். ஆகையால் தனியார்துறையிலும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
நாட்டின் ஒவ்வொரு தாலுகாக்களிலும் உறைவிடப் பள்ளிகளை அமைக்க வேண்டும். மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சியும் போட்டியிடும்.
இவ்வாறு பஸ்வான் கூறினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசுகையிலும் தனியார் துறையிலும் இடஒதுக்கீடு அடிப்படையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட் வேண்டும் என்பதை பஸ்வான் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications