கான்பூர் ரயில் விபத்து: பிரதமர் ரூ.2 லட்சம்... ரயில்வே ரூ.3.50 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
கான்பூர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி தலா 2 லட்சம் ரூபாயும் ரயில்வே அமைச்சர் 3.50 லட்சம் ரூபாயும் நிவாரணம் அறிவித்துள்ளனர்.
கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் புக்ரையான் என்ற இடத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு பிரதமர் மோடி மற்றும் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நஷ்டஈடு அறிவித்துள்ளனர்.
பாட்னா-இந்தூர் எக்ஸ்பிரஸ் உத்தரப்பிரதேச மாநிலம் புக்ரையான் என்ற இடத்தில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயிலின் 14 பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்று மோதியதில் பெட்டிகள் உருக்குலைந்து போயின. சின்னாபின்னமான பெட்டிகளில் இருந்து இதுவரை 63 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. பெட்டிகள் குறுக்கும் நெடுக்குமாக சிதறி கிடப்பதால் அந்த தடத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதேபோல் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவும் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 3.50 லட்சமும் , பலத்த காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் லேசான காயமடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே உத்தரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவும் விபத்தில் சிக்கியவர்களுக்கு இழப்பீடு அறிவித்துள்ளார். அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாயும் படுகாயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் லேசான காயமடைந்தவர்களுக்கு 25,000 ரூபாயும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மத்தியப்பிரதேச அரசும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 50000 ரூபாயும் இழப்பீடு அறிவித்துள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications