கான்பூர் ரயில் விபத்து: பிரதமர் ரூ.2 லட்சம்... ரயில்வே ரூ.3.50 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
கான்பூர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி தலா 2 லட்சம் ரூபாயும் ரயில்வே அமைச்சர் 3.50 லட்சம் ரூபாயும் நிவாரணம் அறிவித்துள்ளனர்.
கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் புக்ரையான் என்ற இடத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு பிரதமர் மோடி மற்றும் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நஷ்டஈடு அறிவித்துள்ளனர்.
பாட்னா-இந்தூர் எக்ஸ்பிரஸ் உத்தரப்பிரதேச மாநிலம் புக்ரையான் என்ற இடத்தில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயிலின் 14 பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்று மோதியதில் பெட்டிகள் உருக்குலைந்து போயின. சின்னாபின்னமான பெட்டிகளில் இருந்து இதுவரை 63 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. பெட்டிகள் குறுக்கும் நெடுக்குமாக சிதறி கிடப்பதால் அந்த தடத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதேபோல் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவும் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 3.50 லட்சமும் , பலத்த காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் லேசான காயமடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே உத்தரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவும் விபத்தில் சிக்கியவர்களுக்கு இழப்பீடு அறிவித்துள்ளார். அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாயும் படுகாயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் லேசான காயமடைந்தவர்களுக்கு 25,000 ரூபாயும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மத்தியப்பிரதேச அரசும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 50000 ரூபாயும் இழப்பீடு அறிவித்துள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications