அருணாச்சலப்பிரதேச முதல்வராக பதவியேற்றார் பேமா கண்டு
இடா: அருணாச்சலப்பிரதேசத்தின் புதிய முதல்வராக பேமா கண்டு பதவியேற்றுள்ளார். இடா நகரில் நடைபெற்ற விழாவில் அம்மாநில ஆளுநர் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அருணாச்சலப் பிரதேச அரசியலில் சமீபகாலமாக அடுத்தடுத்து திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றனர்.
அதன்படி, பாஜக ஆதரவுடன் கலிகோ புல் தலைமையில் அருணாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அமைத்த அரசு செல்லாது என சில தினங்களுக்கு முன் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, 2015 டிசம்பர் 15ஆம் தேதிக்கு முன்னர் முதலமைச்சராக இருந்த நபாம் துகியின் ஆட்சி மீண்டும் அமைந்தது.

எனவே, சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க நபாம் துகிக்கு ஆளுநர் கெடு விதித்திருந்தார். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இடா நகரில் நடந்தது. இதில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொண்டனர்.
அப்போது, யாரும் எதிர்பார்க்காத அதிரடி திருப்பமாக அதிருப்தி எம்.எல்.ஏ.வான பேமா கண்டுவை சட்டசபை காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்க முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, ஆளுநரை சந்தித்த முதலமைசர் நபாம் துகி, தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
அதனைத் தொடர்ந்து, பேமா கண்டு(37) முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டார். 47 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க அவர் உரிமை கோரினார்.
அதன் தொடர்ச்சியா இடா நகரில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பேமா கண்டு அருணாச்சலப் பிரதேச முதல்வராக பதவியேற்றுள்ளார். அம்மாநில ஆளுநர் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பேமா கண்டுதான், 2015ஆம் ஆண்டு நபாம் துகி ஆட்சி கவிழ முக்கிய காரணமாக இருந்தவர். இவர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதல்வர் டோர்ஜி கண்டுவின் மகன் ஆவார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications