72 வயது தாத்தாவின் மரணம்.. காரணம் சில குரங்குகள்.. வழக்கு போட கோரும் குடும்பத்தினர்!
குரங்குகள் மீது வழக்கு பதிய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாக்தத்: சிலரின் அறியாமையை நினைத்து சிரிப்பதா? அழுவதா என்றே தெரியவில்லை.
உத்திரபிரதேச மாநிலத்தில் பாக்பத் என்ற பகுதி உள்ளது. இங்கு வசித்து வருபவர் தரம்பால் சிங். இவருக்கு வயது 72 ஆகிறது. இவர் தன் பக்கம் உள்ள ஒரு காட்டு பகுதியில் விறகு, சுள்ளிகளை பொறுக்கி கொண்டிருந்தார்.

தரம்பால்
அப்போது அங்கிருந்த ஒரு பாழடைந்த கட்டிடத்தில் குரங்கு கூட்டம் ஒன்று இருந்தது. தரம்பால் விறகு பொறுக்குவதை கண்ட அந்த குரங்குகள், அங்கிருந்த செங்கல் மற்றும் கற்களை கொண்டு தரம்பாலை தாக்க தொடங்கின. இதனால் தரம்பால் படுகாயமடைந்து விழுந்தார். இதை கண்ட அங்கிருந்தோர் உடனடியாக தரம்பாலை தூக்கி கொண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

வழக்கு பதிய வேண்டும்
ஆனால் தரம்பால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனால் தரம்பால் குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தனர். எனவே நேராக போலீசாரிடம் சென்ற அவர்கள், தரம்பாலின் உயிரிழப்புக்கு காரணமான குரங்குகள் மீது வழக்கு பதிய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

கெஞ்சிய குடும்பத்தார்
இதனை கேட்டு அரண்டுபோன போலீசார், குரங்கு மீது எல்லாம் வழக்கு போட முடியாது, குரங்கு என்றில்லை எந்த விலங்குகள் மீதும் வழக்கு போட முடியாது என்றனர். ஆனால் குடும்பத்தாரோ, அழுதுகொண்டே எப்ஐஆர் போடுங்கள் என்று கெஞ்சி கேட்டு கொண்டே இருந்தனர்.

மேலதிகாரிகளுக்கு கடிதம்
தொடர்ந்து போலீசார் மறுக்கவும், சம்பந்தப்பட்ட குரங்குகள் மீது எஃப்.ஐ.ஆர் போட்டே ஆக வேண்டும் என்று மேல் அதிகாரிகளுக்கு கடிதம் எழுத போவதாக குடும்பத்தினர் தெரிவித்துவிட்டு வந்துள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications