ஓ.சியில் தண்ணி அடிக்கவே ராணுவத்தில் சேர்கிறார்கள்: தெலுங்கு தேசம் எம்.பி. திமிர் பேச்சு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இலவசமாக மது, உணவு, விடுமுறை கிடைக்கும் என்பதால் பலர் இந்திய ராணுவத்தில் சேர்வதாக தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி. ரவிந்திர பாபு பந்துலா தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் தெலுங்கு தேசக் கட்சியைச் சேர்ந்த விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு விமானத்தில் செல்கையில் தான் தீப்பெட்டியை எடுத்துச் செல்வதாகக் கூறி சர்ச்சையை கிளப்பினார். இது குறித்து டைம்ஸ் நவ் டிவி சேனலில் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட அர்னாப் கோஸ்வாமி விவாத மேடை நிகழ்ச்சி நடைபெற்றது.

People join army for free liquor and food: TDP MP

அந்த நிகழ்ச்சியில் தெலுங்கதேசம் கட்சியைச் சேர்ந்த அமலாபுரம் தொகுதி எம்.பி. ரவிந்திர பாபு பந்துலா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், இலவச மது, உணவு, சலுகைகள், விடுமுறை ஆகியவற்றுக்காகத் தான் பலர் இந்திய ராணுவத்தில் சேர்கிறார்கள் என்று தெரிவித்தார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய மேஜர் விஜய் ராணுவத்தார் கடுங்குளிரிலும் நாட்டை காப்பது குறித்து பேசியதற்கு தான் பந்துலா பொறுப்பில்லாமல் அவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த வீடியோ பழையது என்றாலும் தற்போது தான் அது இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.

அசைவ உணவுக்காகவும், மதுவுக்காகவும் ஆட்கள் ராணுவத்தில் சேர்கிறார்கள் என்று தெரிவித்துள்ள பந்துலூவை பலரும் திட்டித் தீர்த்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+