பிறரது மனது புண்படாத வகையில் கருத்து கூற வேண்டும்.. வைரமுத்துக்கு ஓபிஎஸ் அட்வைஸ்
டெல்லி: பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் பிறரது மனது புண்படாத வகையில் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
நிதி அமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் இன்று பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டம் நடந்தது. மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

தமிழகம் சார்பில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசுகையில், தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் பற்றியும், அதற்கான நிதி ஒதுக்கீடு பற்றியும் கோரிக்கை விடுத்தார்.
இதன்பிறகு, நிருபர்களிடம் பேட்டியளித்த பன்னீர்செல்வத்திடம், ஆண்டாள் பற்றி கவிஞர் வைரமுத்து, பேசிய கருத்து சர்ச்சையாகியுள்ளது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த, பன்னீர்செல்வம், அது தப்புதான். பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் பிறரது மனது புண்படாத வகையில் கருத்து தெரிவிக்க வேண்டும் என கூறினார்.
இயக்குநர் பாரதிராஜா, வைரமுத்து 'தனி நபர் இல்லை' என்றும், எங்களை ஆயுதம் ஏந்த தூண்டாதீர்கள் என்றும் கூறிய நிலையில், பன்னீர்செல்வம் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications