ஜல்லிக்கட்டுக்கு முட்டுக்கட்டை போடும் "பீட்டா" அமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம் !
டெல்லி: ஜல்லிக்கட்டில் காளைகள் பங்கேற்க அனுமதி அளிக்கும் அவசரச் சட்டத்தை தமிழக அரசோ, மத்திய அரசோ கொண்டு வந்தால் அதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜியை பிராணிகள் நல உரிமைகள் அமைப்பு (பீட்டா) அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
காளைகளை ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம் உள்ளிட்டவற்றில் பங்கேற்க அனுமதிக்கும் மத்திய அரசின் ஜனவரி 7-ஆம் தேதியிட்ட அரசாணைக்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது. மேலும், இந்தத் தடையை நீக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் நேற்று கூறியுள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக, அவசர சட்டம் பிறப்பிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார். இந்நிலையில், விலங்குகள் நல அமைப்பான பீட்டா,குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு நேற்று ஒரு கடிதம் எழுதியது.
அதில், ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது. காளைகளை பாதுகாக்க வேண்டுமானால், அத்தகைய அவசர சட்டம் எதையும் தாங்கள் பிறப்பிக்க வேண்டாம்.
மேலும், இதுதொடர்பான அவசர சட்டம் பிறப்பிப்பது அரசியல் சட்டத்துக்கு முரணானது மட்டுமின்றி, பாராளுமன்றத்தின் அதிகாரத்தை பறிக்கும் செயல் என்பதையும் தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறோம் என்று பீட்டா கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் மிருக வதைக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து "பீட்டா' முன்னெடுத்துச் செல்லும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications