ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 3வது முறையாக... பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1.82 குறைப்பு
டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.92 குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், டீசல் விலை லிட்டருக்கு 50 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலையுயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதமிருமுறை மாற்றி அமைக்கின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அந்நியச் செலாவணியில் மாற்றங்கள் அடிப்படையில் இந்த விலை நிர்ணயிக்கப்படுகிறது.
இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலைக்குறைப்பு செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
பெட்ரோல் விலை...
இதன்படி, பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்பட்டது. இதன்படி டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.68.51 ஆகவும், சென்னையில் லிட்டருக்கு வரியுடன் சேர்த்து ரூ.1.92 குறைக்கப்பட்டு ரூ.71.55 ஆகவும் இருக்கும். மற்ற நகரங்களிலும் வாட் வரிக்கு ஏற்ப விலை மாறுபடும்.
3வது விலைக் குறைப்பு...
முன்னதாக இம்மாதம் முதல் தேதியன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.90 பைசாவும், அதனைத் தொடர்ந்து கடந்த 13ம் தேதி ரூ.1.89 முதல் ரூ.2.38 வரை குறைக்கப்பட்டது. ஆகஸ்ட் 15ம் தேதி புதிய விலை அறிவிக்கப்பட இருந்த நிலையில், அதற்கு 2 நாள் முன்னதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரே அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
விலை உயர்வு...
இது ஒருபுறமிருக்க கடந்த 2013ம் ஆண்டு ஜனவரியில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவின்படி, டீசல் விலை ஒவ்வொரு மாதமும் லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த விலை அதிகரிப்பு உற்பத்தி செலவுக்கும் சில்லறை விற்பனைக்கு இடையிலான வித்தியாசம் குறையும் வரையில் நீடிக்கும் எனக் கூறப்படுகிறது.
டீசல் விலை...
இதன்படி டீசல் விலை நேற்று லிட்டருக்கு 50 பைசா உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வாட் வரிகளுடன் சேர்த்து டெல்லியில் டீசல் விலை லிட்டருக்கு 0.57 பைசா அதிகரித்து ரூ.58.97 ஆகவும், சென்னையில் லிட்டருக்கு 0.62 பைசா அதிகரித்து ரூ.62.92 ஆகவும் இருக்கும்.